சிவகார்த்திகேயன், தனுஷ் பின்னாடி ஓடாத நாளே இல்ல! இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.. வருத்தத்தில் சேரன்

Director Cheran: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராக இருப்பவர் சேரன். குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் அந்த ஆழமான பாசத்தை தன் படங்களின் மூலம் காட்டுவதில் தலை சிறந்த இயக்குனராக கருதப்படுகிறார். பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் முதன் முதலில் சேரன் இயக்குனராக அறிமுகமானார்.

அறிமுகப் படத்திலேயே தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் சேரன். அதனை தொடர்ந்து பொற்காலம், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற பல வெற்றிப்படங்களை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார் சேரன்.

இதையும் படிங்க: ராஜ்கிரணுக்காக எல்லோரிடமும் சண்டை போட தனுஷ்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!…

பல படங்களில் ஹீரோவாகவும் நடித்த சேரன் தான் ஹீரோவாக நடிக்க தள்ளப்பட்டேன் என்று தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அவர் நடித்து பெரிய ப்ளாப் ஆன படம் ‘மாயக்கண்ணாடி’. பெரிய தோல்வியை தழுவிய படம்.

ஆனால் அந்தப் படத்தில் அவரை தவிற வேறு யார் நடித்திருந்தாலும் படம் நிச்சயமாக வெற்றிப்பெற்றிருக்கும் என ஒரு பேட்டியில் சேரன் கூறியிருக்கிறார். சிம்புவோ தனுஷோ நடித்திருந்தால் பெரிய அளவில் ஓடியிருக்கும். நான் நடித்ததனால்தான் படம் தோல்வியை தழுவியது என கூறினார்.

இதையும் படிங்க: ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா செய்த சூப்பர் ஷாப்பிங்!.. – என்னென்ன சொல்கிறார் பாருங்க

அதுமட்டுமில்லாமல் நான் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்துமே எனக்கான கதை இல்லை. பல பெரிய நடிகர்களிடம் நடிக்க கேட்டு அவர்கள் யாரும் வராத பட்சத்தில் நான் நடிக்க வேண்டியதாகி விட்டது என்றும் இப்பொழுதும் என் கதைக்கு ஒரு பெரிய ஹீரோவிடம் கால்ஷீட் கேட்டு வருகிறேன். சிவகார்த்திகேயனோ தனுஷோ நடித்தால்தான் நன்றாக இருக்கும். பல முறை தொலைபேசியில் கேட்டு பார்த்தேன். ஆனால் இதுவரை சரியான பதில் அவர்களிடம் வரவில்லை.

ஒரு வேளை கால்ஷீட் இல்லையா என்று தெரியவில்லை. அதற்கு மேல் என் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா என தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் என் பயணத்தை முடித்துவிட முடியாது. யாரும் வராத பட்சத்தில் நான் தான் நடிக்க வேண்டியிருக்கும் என சேரன் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்!.. அட இவரும் கேப்டன் ரசிகன் போல!..

 

Related Articles

Next Story