Cinema News
ஆண்மைத்தன்மை இருக்கா?..பொன்னியின் செல்வனில் ஏன் அத காட்டல?..விளாசிய பிரபல இயக்குனர்..
Published on
By
மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். படம் வெளியாகி வசூலிலும் சரி மக்களிடமும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்த படம் சிலர் முன்னிலையில் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதமன் கூறியதாவது: இந்த படம் எடுத்த விதம், இப்பொழுது வசூலை குவிக்கும் விதம் எல்லாம் சரி தான். ஆனால் இந்த படைப்பை எடுக்கும் முன் அதன் வரலாற்றின் உண்மைதன்மையை நன்கு ஆராய்ந்து சொல்லவேண்டும். எத்தனையோ பேரரசுகள் இருந்தாலும் சோழப்பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மன்னர் வழிவந்த பேரரசு ஆகும்.
சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் எதற்காக படம் எடுக்க வேண்டும்? ஏனெனில் அப்பொழுது சோழர்கள் கொடி என்றாலும் காலப்போக்கில் அது பிரபாகரனின் சின்னமாக இருந்ததன் காரணமாக தான் அதை காட்டியிருக்க மாட்டார்.
அப்படி என்றால் அந்த பயத்தினால் தான் படத்தில் காட்டவில்லையா? பயம் இருந்தால் ஏன் பொன்னியின் செல்வன் நாவலை தொட வேண்டும்? அதை மீறி நிரூபர்கள் கேட்டாலும் நான் காட்டியது சோழர்கள் பயன்படுத்திய புலிக்கொடி தான் என்று சொல்லியிருக்கலாமே! என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் கௌதமன். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழுணர்வோடு இல்லையென்றால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நாகேஷ். சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு பணியை ராஜினாமா...
Second Part: தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்கள் போல முதலில் இரண்டாம் பாகம் எடுக்கப்படாது. ஆனால் சமீபத்திய காலத்தில் அதன்...
அம்மா நடிகை என்பதால் சினிமாவுக்கு வந்தவர் ஜெயலலிதா. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அவருக்கு...
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி மற்றும் மீனா டீ குடித்து கொண்டு இருக்கின்றனர். அப்போ அங்கு வருகிறார் ரோகிணி. நீங்க...
Mansoor Alikhan: நேற்று பிரச்சாரம் செய்ய போன இடத்தில் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் குறித்த செய்தி...