More
Categories: Cinema News latest news

பிடிக்காதவங்களை எப்படி எல்லாம் பழி வாங்கியிருக்கிறார் பாருங்க இயக்குனர் ஹரி…!

தமிழ் சினிமாவில் பவர் ஃபுல்லான இயக்குனராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மிரட்டி வருபவர் இயக்குனர் ஹரி. இவர் சமீபத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை எடுத்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertising
Advertising

அடுத்ததாக தெலுங்கில் ஒரு படம் பண்ண இருக்கிறார். கமெர்ஷியலுக்கு பேர் போனவர் ஹரி. கமெர்ஷியல் படங்களை மட்டும் தான் எடுப்பேன் என பகிரங்கமாக கூறினார். இவரின் இயக்கத்தில் சாமி, வேல், சிங்கம் போன்ற படங்கள் எல்லாம் சக்க போடு போட்ட படங்களாகும்.

முதன் முதலில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் தமிழ் என்ற படத்தை எடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் படத்தில் எந்த அளவிற்கு ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கும் இவருடைய படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார் ஹரி.

காரணம் நான் எடுக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை என் வாழ்க்கையில் எனக்கும் பிடிக்காதவர்களை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர்களுக்குரிய வசனங்களை எழுதுகிறேன். அதனால் தான் அந்த அளவுக்கு நல்ல வரவேற்பை பெறுகிறது. பிடிக்காதவர்களை நினைத்தாலே வெறி தலைக்கு ஏறிடும். அந்த வகையில் தான் வில்லன் கதாபாத்திரங்கள் எல்லாம் அமைகின்றன என கூறினார்.

Published by
Rohini

Recent Posts