தரலோக்கலா உருவாகும் தக்லைப்!.. வேறலெவல் வெறித்தனம் காட்டும் மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

தமிழ் சினிமாவில் எலைட் இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். அதாவது இவரின் படங்கள் மெத்த படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பிடிக்கும் என ஒரு பொதுவான கருத்து உண்டு. அதாவது, சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே மணிரத்னம் படம் பிடிக்கும் என சொல்வார்கள்.

அவரும் இதுவரை ஒரு கிராம கதையை படமாக எடுத்தது இல்லை. அவரின் படங்களில் ஏழைகள் கூட எலைட் மனிதர்கள் போலவே பேசுவார்கள். அதைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், தக் லைப் படத்தை அவர் இதுவரை இல்லாத அளவுக்கு தரலோக்கலாக உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் சேனாதிபதி எண்ட்ரி… இந்தியன்2 படத்தின் கதை இவருக்கு தானா? இணையத்தில் லீக்…

தக் லைப் திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் எனவும், கமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க முடியாது எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட்டுக்கு பின் மணிரத்னம் இயக்கும் படம் இது. அதோடு, நாயகன் படத்திற்கு பின், அதாவது 37 வருடங்களுக்கு பின் மணிரத்னமும் - கமலும் இணைந்திருக்கும் படம் இது.

எனவே, இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலகிவிட்டனர். குறிப்பாக, சிம்பு வந்ததாலேயே ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் செய்த வேலை!.. போட்டோவை பகிர்ந்த எஸ்.ஏ.சி!.. முழு அரசியல்வாதியாகவே மாறிட்டாரு!..

அதோடு, குறைவான சம்பளம் என்பதால் ஜெயம் ரவி விலகிவிட்டார் எனவும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படி இரண்டு பேரும் விலகிவிட்டதால் கமல்ஹாசன் மற்றும் சிம்புவை சுற்றியே கதை நடப்பது போல கதையை மாற்றிவிட்டார் மணிரத்னம். இந்த படத்தில் கமலின் மகனாக சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பக்கா லோக்கல் கேங்ஸ்டராக இப்படத்தை உருவாக்கி வருகிறாராம் மணிரத்னம். எனவே, வழக்கமான மணிரத்னம் படம் என எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக சர்ப்பரைஸாக இருக்கும் என சொல்கிறது படக்குழு.

 

Related Articles

Next Story