More
Categories: Cinema News latest news

வாய்ப்புக்காக அஜித்திடம் போராடிய இயக்குனர்!… சொல் பேச்சு கேட்கலைல வாய்ப்பே கிடையாது!…

Ajithkumar: கோலிவுட்டில் டாப் நடிகராக இருக்கும் அஜித் தன் பேச்சை கேட்காதவரை அதன் பின்னர் தன்னுடன் சேர்த்துக்கவே மாட்டார். அப்படி ஒரு சம்பவம் பிரபல இயக்குனருக்கும் நடந்து இருக்கிறது. அதிலும் அஜித்துக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் என்பது தான் இந்த சம்பவத்தில் ஹைலைட்டே.

அஜித் தனக்கு ஹிட்டே கொடுக்கவில்லை. ஆனால் தான் சொல்வதை மட்டுமே கேட்கும் இயக்குனருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து கொண்டே இருப்பார். ஆனால் ஹிட் கொடுத்த இயக்குனர் சொல்லை மீறினால் கிட்டக்கவே சேர்க்க மாட்டாராம். இந்த விஷயத்தில் ரொம்பவே வீக்கான ஒரு ஆள் தான் வெங்கட் பிரபு. அவர் பொதுவாகவே ஜாலி டைப்.

இதையும் படிங்க… பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… எல்லாத்துக்கும் அந்தப் பாடல் தான் காரணம்.!

அஜித்துக்கு மங்காத்தா என்ற ஒரு ஹிட் படத்தினை கொடுத்தவர். அந்த படம் அவர் கேரியரை வெகுவாக உயர்த்ததியது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கு அஜித் வாய்ப்பு தருவார் என ரொம்ப ஆசையாக இருந்தாராம். ஆனால் அது நடக்கவே இல்லையாம். அந்த வாய்ப்புக்காக வெங்கட் பிரபு ரொம்பவே போராடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட தன் தந்தையை வைத்து கூட சமரசம் பேசிவிட்டாராம். அஜித் மட்டும் மசியவே இல்லை. இதுகுறித்து விசாரிக்கும் போது ஒருமுறை அஜித்தை எதேர்ச்சையாக வெங்கட் பிரபு வெளியில் சந்தித்து இருக்கிறார். இருவரும் போட்டோ எடுத்துக்கொள்ள அஜித் இதை இப்போதைக்கு ரிலீஸ் செய்யாதீங்க.

இதையும் படிங்க… அடேய் எனக்கு படம் தான்டா முக்கியம்!..கோட் படத்தால் தன்னுடைய ஆசையை துறந்த வெங்கட் பிரபு!…

அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க அஜித் விரும்பவே இல்லையாம். அதுமட்டுமல்லாமல் வெங்கட் பிரபுவை அவர் கடைசியாக நேரில் பார்த்ததும் அந்த நிகழ்வு தான். வருடங்கள் உருண்டோட இன்னும் அஜித்திடம் பேசக்கூட அவரால் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts