அடுத்த படத்துக்கு ஒரு கோடி கொடுத்தாதான் செய்வேன்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வேலு பிரபாகரன்..

Published on: June 3, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வேலு பிரபாகரன். அவர் இயக்கிய பல படங்கள் சமகாலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன. தமிழ் சினிமாவில் அப்பொழுது சில இயக்குனர்கள் மட்டும் ஹாலிவுட் படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தனர். அப்படி தமிழில் ரீமேக் செய்த இயக்குனர்களில் இயக்குனர் வேலு பிரபாகரனும் முக்கியமானவர்.

ஆங்கிலத்தில் ஃப்ராங்கன்ஸ்டைன் என்கிற திரைப்படத்தை தழுவலாக கொண்டு தமிழில் நாளைய மனிதன் என்கிற திரைப்படத்தை இவர் எடுத்துள்ளார். அதேபோல அப்பொழுது பிரபலமாக இருந்த பிரிடேட்டர் என்கிற திரைப்படத்தை கொண்டு தமிழில் அசுரன் என்கிற திரைப்படத்தை அப்பொழுதே எடுத்தார்.

அசுரன் திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சில சுவாரசியமான விஷயங்களை ஒரு பேட்டியில் இயக்குனர் வேலு பிரபாகரன் பகிர்ந்துள்ளார். நாளைய மனிதன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு வேலு பிரபாகரன் இயக்கிய திரைப்படம் அசுரன். அசுரன் திரைப்படத்தை இயக்க நினைத்தபோது முதலில் இதற்கு கதாநாயகனாக நடிகர் அருண் பாண்டியனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதனை அடுத்து கதாநாயகியாக ரோஜாவை நடிக்க வைக்க முடிவு செய்தார்.

வேலு பிரபாகரன் போட்ட ரூல்:

எனவே நடிகை ரோஜாவின் கணவரும் தயாரிப்பாளருமான ஆர்.கே செல்வமணியிடம் சென்று ரோஜாவின் கால் ஷீட் குறித்து பேசி உள்ளார் இயக்குனர் வேலு பிரபாகரன். அந்த சமயத்தில் ஆர்.கே செல்வமணி வேலு பிரபாகனிடம் எந்த கதையை படமாக்க போகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு வேலு பிரபாகரன் ஆங்கிலத்தில் வந்த ப்ரேடட்டர் திரைப்படத்தைதான் தமிழில் எடுக்க போகிறேன் எனக் கூறியுள்ளார்.

அதுவும் குறைந்த பட்ஜெட் 40 லட்ச ரூபாயில் அந்த படத்தை எடுத்து முடிக்க போவதாக கூறியுள்ளார். அதனை கேட்டு ஆர்.கே செல்வமணி இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அப்போது ஒரு நிபந்தனையை போட்டுள்ளார் வேலு பிரபாகரன் அதாவது இந்த திரைப்படத்தை நான் உங்களுடன் சேர்ந்து இயக்க வேண்டும் என்றால் நான் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் அந்த படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும். அதற்கு ஆர்.கே செல்வமணி ஒப்புக்கொள்ளவே அசுரன் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் பிறகு அந்த ஒரு கோடி ரூபாய் படம் உருவாகவில்லை என்பதுதான் சோகம்.

இதையும் படிங்க: பாலச்சந்தரை பார்த்து பாலச்சந்தர் இருக்கிறாரா என்று கேட்ட அஜித் பட இயக்குனர்! இப்படி ஒரு சர்ப்ரைஸா கொடுக்குறது?

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.