விவாகரத்தை ஏன் அப்படி கொண்டாடினேன் தெரியுமா?.. இவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்காரா ஷாலினி?.. அடக்கடவுளே!..

முள்ளூம் மலரும் சீரியலில் நடித்து இருந்தாலும் சின்னத்திரை நடிகை ஷாலினி பிரபலமானது சமீபத்தில் அவர் நடத்திய விவாகரத்து போட்டோஷூட்டில் தான். ஓவர் நைட்டில் பிரபலம் ஆக வைத்த அந்த போட்டோஷூட்டுக்கு பின்னாடி இருக்கும் கண்ணீர் கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை ஷாலினி.

என்னோட முதல் திருமணம் சரியாக அமையவில்லை. அதனால், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நான், இரண்டாவதாக ரியாஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டேன். முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி அறிந்த நிலையில், இரண்டாவது திருமணத்தில் அட்ஜெஸ்ட் பண்ணி போக வேண்டும் என்றும் இந்த வாழ்க்கையையும் விட்டு விடக் கூடாது என ரொம்பவே கவனமாக வாழ்ந்து வந்தேன்.

அவன் சரியான சைக்கோ

ஆரம்பத்தில் ரியாஸ், என்னை ரொம்பவும் அக்கறையுடனும் பார்த்துக் கொண்டது போல நடித்தான். ஆனால், அதன் பின்னர் தான் அவனுடைய சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. ஒரு குழந்தை பிறந்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் என நினைத்து குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், நாட்கள் கடந்தும் எந்த பலனும் இல்லாத நிலையில், அதற்கான சிகிச்சைகளிலும் ஈடுபட்டு வந்தேன்.

எனக்கு டைவர்ஸ் ஆனதை கொண்டாடும் போது, கையில் சரக்கு பாட்டில் வைத்திருந்ததை பார்த்து பலரும் என்னை ட்ரோல் செய்தனர். ஆனால், தனக்கு நண்பர்கள் இல்லை, என் கூட சேர்ந்து சரக்கடி என என்னை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததே ரியாஸ் தான்.

விவாகரத்தை கொண்டாடியது ஏன்?

ஒரு நாள் சரக்கடித்து விட்டு குடி போதையில் நான் படுத்து நல்லா தூங்கிட்டேன். அப்போ திடீரென என் மண்டையில் பாட்டிலால் அடித்து எழுப்பி விட்டு, நான் தூங்காம இருக்கேன், உனக்கு மட்டும் எப்படி தூக்கம் வருதுன்னு போட்டு அடிக்க ஆரம்பித்தான்.

மண்டையில இருந்து ரத்தம் கொட்டினாலும், அதையும் கண்டுக்காம தொடர்ந்து அடிச்சான், சரியான சைக்கோ. அதனால் தான் அவன் கூட இனிமே வாழ முடியாதுன்னு முடிவு பண்ணி விவாகரத்து வாங்கினேன். அந்த சந்தோஷத்தை தான் அனைவருக்கும் தெரியும்படி கொண்டாட நினைத்து அந்த விவாகரத்து பார்ட்டியை நடத்தினேன் என தனது சோகக் கதையை ஓபனாக பேசியுள்ளார் சின்னத்திரை நடிகை ஷாலினி.

 

Related Articles

Next Story