டைவர்சா? எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..

Aarti Ravi: நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்து நிலையில் தற்போது இத்தம்பதியால் ரசிகர்களுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக பிரபலங்கள் தங்கள் விவாகரத்தை அறிவிக்கும் போது ஒரே மாதிரியான அறிக்கையை தயார் செய்து அதில் அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டு தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு விடுவார்கள். இதுதான் சமீப காலமாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு அனிருத் போட்ட பக்கா பிளான்…! செமயா ஒர்க் அவுட் ஆகியிருக்கே..!

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயம் ரவி தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆர்த்தியுடன் முடித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது மிகவும் கடினமான ஒரு முடிவு. இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

Aarthi

இந்த விவாகரத்திற்கு பின்னணி ஆர்த்தி ஜெயம் ரவியை தன்னுடைய ஓவர் அன்பால் சந்தேகப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், பிரபல தயாரிப்பாளரான மாமியார் கொடுக்கப்படும் அதீத மன உளைச்சல் தான் காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஆர்த்தி தரப்பிலிருந்து எந்த தகவல்களும் வராமல் இருந்தது.

இதையும் படிங்க: வேட்டையனா, கூலியா எது சிறந்த படமாக இருக்கும்? கழுவுற மீனுல நழுவுற மீனா பதில் சொல்லிட்டாரே..!

அவர் தன்னுடைய இன்ஸ்டாக கணக்கில் இன்னமும் ரவி பெயருடன் தான் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த விவாகரத்து அறிக்கை குறித்து அறிந்து கொண்ட போது நான் கவலை அடைந்தேன்.

முழுக்க முழுக்க என் ஒப்புதல் இல்லாமல், கவனத்திற்கு வராமல் தான் இது வெளியாகி இருக்கிறது. கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் கண்ணியத்தை தொலைத்து விட்டதாக நினைக்கிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு அவராக எடுத்ததே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க நான் சமீப காலமாக பலவித முயற்சிகளை செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய குழந்தைகளும் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த விவாகரத்திற்கு நான் தான் காரணம் என பொதுவெளியில் வைக்கப்படும் குற்றச்சாட்டு, என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தாக்குதல்களை சிரமத்துடன் எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மறுக்கப்படும் பொய் காலப்போக்கில் உண்மையாகிவிடும்.

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…

அதனால் இந்த வேலையிலும் இந்த பொய்களை நான் மறுத்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கஷ்டமான காலத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தை, மன உறுதியை அவர்களுடன் நின்று தாயாக கொடுக்க வேண்டியது என் முதல் கடமை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவிலும் அவர் தன்னை ஆர்த்தி ரவி என்று குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இதற்கு ரவி தரப்பு எதுவும் பதில் சொல்ல நேரிடுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it