Categories: latest news

அவர் தமிழ்நாட்டுக்காரரே இல்ல.. அப்புறம் ஏன் அவர் வரனும்! அஜித்தின் செயலை நியாயப்படுத்தும் பிரபலம்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். நடிகர், கார் ரேஸர், பைக் ரேஸர், ரைஃபில் சுடுதல் என மற்ற திறமைகளையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதர் அஜித். அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக கொண்டாடினார் அஜித்.

அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஷாலினி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக அஜித்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. இது விஜயகாந்த் மறைவில் இருந்தே தொடங்கியது. விஜயகாந்த் மறைவிற்கு வராததது. அந்த நேரத்தில் வெளி நாடுகளில் படப்பிடிப்பில் இருந்தார் சரி.

இதையும் படிங்க:நீங்க இங்க இருந்தா ஷூட்டிங்கே நடக்காது… தயாரிப்பாளரை துரத்திவிட்ட ரஜினி பட இயக்குனர்!…

இப்பொழுது சில நாள்களாக சென்னையில்தான் இருக்கிறார். அவர் சமாதிக்கு கூட சென்று அஞ்சலி செலுத்தவில்லை அஜித். இது சம்பந்தமான விமர்சனங்கள் தொடர்ந்து அவர் முன்வைக்கப்படுகின்றன. மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கும் அஜித் வரவில்லை. அழைப்பிதழ் கொடுத்தும் அதற்கும் வரவில்லை. ரசிகர்களை சந்திக்கவும் விரும்பவில்லை . இது சரிதானா என பிரபல திரைவிமர்சகர் காந்தராஜிடம் கேட்ட போது,

அவருக்கென ஒரு பாலிஸி உருவாக்கி வைத்திருக்கிறார் அஜித். எங்கு போக வேண்டும். யாருக்காக போக வேண்டும் என்பது அவர் விருப்பம். கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு போக வேண்டும் என சொன்னால் ஏன் அவர் வரவேண்டும். முதலில் அஜித் தமிழ்நாட்டுக்காரரே இல்லை. கலைஞருக்கு உறவினரா? இல்லை கலைஞர் வசனத்தில்தான் நடித்தாரா? எதுவும் தொடர்பு இல்லாத போது ஏன் அவர் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இதையும் படிங்க: அம்பானி ஸ்டைலில் ஜெயம் ரவிக்கு கிடைச்ச கிஃப்ட்! ஓடாத படத்துக்கே இப்படினா? மாஸ் பண்ணும் மாமியார்

இப்படி இந்த மாதிரி விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு வந்தால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் எதுவுமே வேண்டாம் என தூக்கிப் போட்டு போகக் கூடிய மனிதர் அஜித். பப்ளிசிட்டி விரும்பாதவர். தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரே தவிர அவரது தாய்மொழி தமிழ் இல்லை. நடிப்பது அவர் தொழில். அது முடிந்ததும் அவர் வேலையை பார்க்க போய்விடுவார். சொல்லப்போனால் நடிப்பை தாண்டி அவருக்கு மோட்டார் சம்பந்தமான தொழிலில்தான் அதிக ஈடுபாடு இருக்கிறது. அதனால் அவர் அவராக இருக்க விரும்புகிறார்.
என காந்தராஜ் கூறினார்.

Rohini

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

41 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago