விஜய், அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டு வசனம் பேசுவதும், பாடல்களில் வரிகளைப் போடுவதும் வழக்கமாக வரும். அப்படி ஒரு பாடல் தான் இது. இந்த அஜீத் பாடலில் விஜயைப் பற்றி தாக்குவது போன்ற வரிகள் வருகிறதாம். இது பற்றி இசை அமைப்பாளர் பரத்வாஜ் இவ்வாறு சொல்கிறார்.
உனக்கென்ன உனக்கென்ன என்ற பாடலில் நீ வந்து பொத்தி பொத்தி வச்ச ஆளு, நான் வந்து காட்டுச்செடி என அஜீத் பாடுவது போல வரும். இந்தப் பாடலில் விஜயைத் தாக்கிப் பாடுவது போன்ற வரிகள் வரும். இது இன்னைக்குத் தேதியில வந்தால் கிழிச்சிருப்பாங்க.
அப்போ சோஷியல் மீடியா ஆக்டிவா இல்ல. அதனால அந்த அளவுக்கு அப்போ உள்ள ரசிகர்கள் சீரியஸா எடுத்துக்கல. பாடலை வைரமுத்து தான் எழுதினாரு. இது தற்செயலா எழுதுனது இல்லை. வேணுமின்னே தான் எழுதுனது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் பரத்வாஜ்.
இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்ற பாடல் இது. இந்தப் பாடலில் ஜெயித்து விடவோ தந்தையும் இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன என்று வரிகள் எல்லாம் வரும். புதிய கீதை படத்தில் விஜய் ஒரு காட்சியில் இங்கு எவன்டா தலன்னு வசனம் பேசுவார். அதற்குப் பதிலடியாக அஜீத்துக்கும் ஒரு பாடல் வந்தது. அதுதான் அட்டகாசம். இந்தப் படத்தின் பாடல் குறித்து இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொல்வது இதுதான்.
நானும் சரணும் பாம்பேல இருக்கும்போது இந்தப் பாடலைப் பற்றி பேசி எழுதினோம். ஹீரோவைப் பற்றி புகழ்ற மாதிரி ஒரு பாட்டு. அட்டகாசத்துல தல போல வருமா… இப்படி ஹீரோவுக்கு எழுதுற பாட்டுலாம் ஆச்சரியமா இருக்கும். நானே பாடின பாடல் என்கிறார் பரத்வாஜ்.
இதையும் படிங்க… நல்லா வெள்ள பனியாரம் மாதிரி கும்முன்னு இருக்கே!.. சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!…
இந்தப் பாடலில் நெஞ்சில் பட்டதை சொல்வானே, நெத்தி அடியிலே வெல்வானே, நெருப்பின் உக்கிரன் இவன் தானே, இளமை துடி துடிக்கும் பயல் தானே… இவனுக்கு இரவிலும் வெயில் தானே, அட்டகாசத்தில் புயல் தானே, நீலவானத்தை மடியில் கட்டுவான், நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான், தலையுள்ள பயல்கள் எல்லாம் தல அல்ல… என்று வரிகள் வரும். அட்டகாசம் படத்தில் தான் இந்த இருபாடல்களும் வருகின்றன. இசை அமைத்தவர் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…