வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் தீபாவளி ரிலீஸாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாகும் என தகவல் வெளியாகியது.
தற்போது, அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் ஊரு சுத்தி வரும் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஒரு 5 வருடமாக அஜித் சென்னையில் படப்பிடிப்பை நடத்துவதை தவிர்த்து வருகிறாராம். அதற்கான காரணத்தை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது, இவர் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினால் ரசிகர்கள் தொல்லை தாங்கவில்லையாம்.
இதையும் படிங்களேன் – அந்த சீன்ல ரோலக்ஸ் சூர்யாவாக சிம்பு வருவார்… கொஞ்சம் ஓவராக பேசிய தேசிய விருது நடிகர்.!
அந்த வகையில், ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூடுவதாகவும், இதனால் ஷூட்டிங் நடத்த கஷ்டமாக இருப்பதாகவும். அஜித் ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் செல்லும்பொழுது, காரை செல்ல விடாமல் செல்பீ எடுப்பதற்கு அலைமோதுவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், அஜித்தின் படப்பிடிப்பு வெளி ஊர்களில் நடக்கிறது என கிசுகிசுக்கப்படுகிறது.
Kavin: தமிழ்சினிமாவில்…
பொதுவாக பலருக்கும்…
மும்பையிலிருந்து தமிழ்…
SundarC: இயக்குனர்…
Actor MimeGopi:…