விடிய விடிய பார்த்தாலும் வெறி அடங்காது!. மொத்த அழகையும் காட்டி சூடேத்தும் ரித்திகா!..

Published on: August 8, 2025
---Advertisement---

Ritika singh: மும்பையை சேர்ந்தவர் ரித்திகா சிங். மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் குத்துச்சண்டை வீராங்கணை இவர். இந்தியாவின் சார்பாக பல போட்டிகளில் இவர் பங்கேற்றிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்தின் கதையை எழுதிவிட்டு அந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். அதேநேரம் அவருக்கு குத்துச்சண்டையும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி அந்த படத்தில் நடிக்க வந்தவர்தான் ரித்திகா சிங். மாதவனோடு இணைந்து அந்த படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். அவரின் நடிப்பால்தான் அந்த படமே வெற்றி பெற்றது. எனவே, இறுதிச்சுற்று படம் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட போது அந்த வேடத்தில் ரித்திகாவே நடித்தார்.

இந்த 3 படங்களுக்காகவும் சிறந்த நடிகைக்கான 9 விருதுகளை வாங்கினார் ரித்திகா. எனவே, குத்துச்சண்டையை விட்டுவிட்டு முழுநேர நடிகையாக மாறினார். விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரான்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் கொலை, மழை பிடிக்காத மனிதன், வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். இதுபோக சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது புதுப்புது நடிகைகள் வந்துவிட்டதால் ரித்திகாவுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சி காட்டவும் தயாராகிவிட்டார்.

கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தன்னை புரமோட் செய்ய துவங்கிவிட்டார். அந்தவகையில் கிளுகிளுப்பான உடையில் பியூட்டை காண்பித்து ரித்திகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment