More
Read more!
Categories: latest news television news

எதிர்நீச்சல்: வெளிச்சத்துக்கு வந்த ஈஸ்வரியின் கல்லூரி வேலை…வாயை கொடுத்து கதிரிடம் வாங்கி கட்டும் ஜனனி…

Ethirneechal Serial: நேற்றைய எபிசோடில் கதிர், ஞானம் ஜீவானந்தத்தின் மகளை பார்த்திட அவள் யாரென்று தெரியாமல் தர்ஷினியிடம் யாரென்று கேட்க தர்ஷினியோ அம்மாவின் தோழியின் மகள் என கூறி சமாளிக்கிறாள். பின் ஈஸ்வரி அந்த இடத்திற்கு வர கதிருக்கு ஈஸ்வரிக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்படுகிறது.

கதிர் ஈஸ்வரியிடம் அந்த குழந்தையை அவளுடைய வீட்டில் விட்டுவிடும்படி கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பின் அன்று இரவு நந்தினியின் மகள் நந்தினியிடம்  நீ எங்காவது போ அம்மா என கூறுகிறாள். தர்ஷினியும் நாங்க பாத்துகிறோம் சித்தி, நீங்க எங்கயாவது போயிடுங்க என கூறுகிறாள்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:எதிர் நீச்சல்: வசமாய் சிக்கிய நந்தினி… சீறி பாய்ந்த மாமியார்… அதகளம் செய்த கதிர்…

பின் மறுநாள் காலையில் ரேணுகாவின் மாமியார் ரேணுகாவிடம் சமையல் பண்ணியாச்சா என கேட்கிறார். அதற்கு ரேணுகா ஜான்சி ராணி அவரது வீட்டிற்கு போய்விட்டார் எனவும் அதனால் சமையல் செய்ய அரை மணி நேரம் ஆகும் எனவும் கூறுகிறார். இவ்வாறு பேசிகொண்டிருக்கும்போதே அங்கு ஈஸ்வரியின் கல்லூரியில் உள்ள பெண் வர அந்த சமயம் பார்த்து கதிரும் ஞானமும் அங்கு வருகின்றனர்.

பின் கதிர் அப்பெண்ணிடம் யார் என்று கேட்க அப்பெண் கதிரிடம் ஈஸ்வரி வேலை பார்க்கும் கல்லூரியில் இருந்து வருவதாக கூற கதிர் ஈஸ்வரியின் மாமியார் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். பின் ஈஸ்வரியின் மாமியார் எங்களுக்கு தெரியாமல் வேலைக்கு செல்கிறாயா? என கூறிவிட்டு இனி இந்த வீட்டு பெண்கள் யாரும் வாசலை தாண்ட கூடாது எனவும் நாங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி எனவும் கூறுகிறார்.

இதையும் வாசிங்க:சிறகடிக்க ஆசை: வளையலால் தொக்காக சிக்கிய விஜயா… மறுபடியும் லட்சமா? கடுப்பில் ரோகினி…

அதற்கு ஈஸ்வரியோ இந்த விஷயத்தில் நானே முடிவினை எடுத்து கொள்கிறேன் என கூறுகிறார். அதற்கு மாமியாரும் மறுத்து சண்டையிடுகிறார். பின் கதிர் தர்ஷினியை பார்த்து அழைக்க அவள் அணிந்திருக்கும் உடையை பார்த்து திட்டுகிறார். அப்போது அங்கிருந்த ஜனனியோ அது அவளுடைய விருப்பம் எனவும் அதை கூற கதிருக்கு உரிமை இல்லை எனவும் கூறுகிறாள்.

அதற்கு கதிர் அவளை ஒதுங்கி இருக்க சொல்கிறார். பின் ஞானமும் தர்ஷினியின் ஆடையை பார்த்து திட்டிவிட்டு வேறு உடையை அணியுமாறு கூறி அனுப்பி விடுகிறார். பின் அங்கு குழந்தைகளுடன் இருந்த ஜீவானந்தத்தின் மகளை பார்த்து கதிர் முறைக்க அதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. நாளைய எபிசோடில் ரேணுகா சிக்கி கொள்கிறாரோ என்னமோ. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:பாக்கியலட்சுமி: பூஜ்ஜியமாகும் கோபி… அப்பா ரூட்டில் ஜொல்லு பார்ட்டியான செழியன்…

Published by
amutha raja

Recent Posts