More
Categories: Cinema News latest news

சத்தியமா இனி இந்த மாதிரி செய்யவே மாட்டேன்.! அப்செட்டில் சூர்யா பட இயக்குனர்.!

சூர்யா நடிப்பில் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் கடைசியாக வெளியான 2 படங்களும் OTT தளத்தில் வெளியானதால், இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் என பலர் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

எப்போதும் இயக்குனர் பாண்டிராஜ் படமென்றால் குடும்பத்துடன் சென்று பார்க்கும்படியாக ஜனரஞ்சமாக இருக்கும். அதுவும் படத்தில் நடிகர்கள் அவ்வளவு பேர் இருப்பார்கள். அது அவரது முதல் படமான பசங்க படத்தில் இருந்தே இது தொடங்கிவிட்டது போல.

இதையும் படியுங்களேன் – வலிமை சாத்தன் பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா?! 1967 முதல்…

அடுத்தடுத்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என அனைத்திலும் நடிகர்கள் அதிகம். இது நம்ம ஆளு திரைப்படம் மட்டும் தான் நடிகர்கள் குறைவு போல.

அண்மையில் பேட்டியளித்த இயக்குனர் பாண்டிராஜ், நான் ஒவ்வொரு படம் எழுத ஆரம்பிக்கும் போதும் இந்த படத்தில் குறைவான கதாபாத்திரங்களை வைத்தே படமெடுக்க வேண்டும் என நினைக்கிறன். ஆனால் கதைக்களம் அப்படி விடுவதில்லை.

நான் செய்த படங்களில் எதற்கும் துணிந்தவன் தான் அதிக நடிகர்கள். அதனால், அடுத்த படம் குறைவான கதாபாத்திரங்களை வைத்து ஒரு படம் எழுத இருக்கிறேன். ஆனால், என்ன ஆகும் என தெரியவில்லை.

Published by
Manikandan

Recent Posts