Connect with us

Cinema News

யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் என்னம்மா பாடுறாரு!.. கொடுத்து வச்ச நிவின் பாலி.. செம சாங்!..

யுவன் சங்கர் ராஜாவுக்கு நா. முத்துகுமார் பாடல் வரிகளில் பல சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் அமைந்தன. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என வரிசையாக ஹிட் ஆல்பங்களே வெளியாகின. ஆனால், நா. முத்துகுமாரின் மறைவுக்குப் பிறகு அத்தகைய காதல் பாடல்கள் தமிழ் சினிமாவில் அரிதாக மாறிவிட்டன.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிள் “மறுபடி நீ”காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது.

இதையும் படிங்க: டிரெய்லர்னு சொல்லிட்டு ஒரே அனுபமாவோட பிட்டு படமா இருக்கே!.. டில்லு ஸ்கொயர் வேறலெவல் மஜா தான்!..

இந்த பாடலை மதன் கார்கி எழுதி உள்ளார். வைரமுத்துவ்ன் பாடல் வரிகளை சமீப காலமாக மிஸ் ஆகுதே என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவரது மகன் தரமான வார்த்தைகளை இந்த பாடலில் கவிதையாகவே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.

சீதாராமம் படத்தில் பாடல் வரிகள் கவனிக்க வைத்தன. அதன் பின்னர் நிச்சயம் ஏழு கடல் ஏழு மலை படத்தின் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே கற்றது தமிழ் படத்தின் காலத்திற்கே கொண்டு சென்று விடும் என தெரிகிறது.

இதையும் படிங்க: சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..

அதிலும், கூடுதல் சிறப்பாக இந்த பாடலை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். அடேங்கப்பா என்னவொரு குரல் என அப்படியே ரிப்பீட் மோடில் கேட்கத் தூண்டும் அளவுக்கு இந்த பாடல் உள்ளது. இந்த படத்திற்காவது நிச்சயம் யுவன் சங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். காதலர் தினத்தை இந்த பாடலுடன் நிறைவு செய்யலாம்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top