Cinema News
ஐயோ..! இடுப்ப மட்டும் காட்டாத!.. குமுதாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்…..
ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. ஆந்திராவை சேர்ந்த நந்திதா ஸ்வேதா முதலில் கன்னடத்தில்தான் நடிக்க துவங்கினார். அதன்பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. அப்படத்தில் விஜய் சேதுபதி இவரை குமுதா என அழைத்து கொண்டே இருந்ததால் ரசிகர்களின் மனதிலும் குமுதாவாகவே மாறினார்.
அதேநேரம் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேறு மாதிரியான நடிப்பில் அசத்தியிருந்தார்.மேலும், FIR என்கிற படத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்தார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் புடவை கட்டி இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ஐயோ குமுதா.. இடுப்ப மட்டும் காட்டாத’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.