இந்த வயசுல இப்படி ஒரு அழகா? ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை பாவனா

நடிகை பாவனா தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார். தெலுங்கு மொழியில் நிறைய படங்களில் பாவனா நடித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மலையாள நடிகர் திலீப் - காவ்யா காதல் விவகாரத்தில் பாவனா கருத்து சொன்னார் என்பதற்காக, அவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டதாக மலையாள படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் திலீப்புக்கு எதிராக கேரள பெண் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வந்த பாவனா ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் காணப்படவில்லை. மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். திலீப் விவகாரத்தை அடுத்து சில ஆண்டுகள் அவர் சினிமாவிலேயே நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இப்போது மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் பாவனா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். துவக்கத்தில் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ, அதே அழகில் இப்போதும் ஜொலிக்கிறார் பாவனா. அதனால் அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் தேடி வருகின்றன.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பாதிப்புகள் காரணமாக சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பாவனா அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார், இப்போது, அவர் சுரிதாரில் இருக்கும் மிக அழகிய படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவ விட்டு இருக்கிறார்.

அடேங்கப்பா, 36 வயதிலும் பாவனா இப்படி ஒரு அழகா, என அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஏங்கி போய் உள்ளனர். பாவனாவின் இந்த அழகிய புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.

elango
elango  
Related Articles
Next Story
Share it