Connect with us

Cinema News

ஒரு வேலையையும் உருப்படியா செய்ய மாட்டாரா பிரபாஸ்!.. இப்படியே போனா அடுத்த படம் என்ன ஆகுமோ?..

நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றன. ஆனால் பிரபாஸ் மீது திடீரென ஒரு பெரிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது டோலிவுட்டில் அது பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் பிரகாஷ் முன்னதாக சலார் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு அடுத்த பார்ட்டில் தான் மொத்த கதையும் தெரியவரும் என தியேட்டரை விட்டு ரசிகர்களை ஒன்றுமே புரியாமல் அனுப்பி வைத்து விட்டனர்.

இதையும் படிங்க: இந்த படம் மட்டும் வரட்டும் பாருங்க!.. எஸ்.கே.வின் நெகட்டிவ் இமேஜே மொத்தமா மாறிடுமாம்!..

சலார் படத்தின் கதை என்ன என்பதே தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்களை தற்போது கல்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்கிற குழப்பத்தில் நடிகர் பிரபாஸ் ஆழ்த்தி விட்டதாக ரசிகர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் பிரபாஸ்அடுத்ததாக சலார் 2 படத்தில் நடித்த அந்த படத்தை வெளியிடுவாரா அல்லது கல்கி 2 படத்தில் நடித்து அந்த படத்தை அடுத்து வெளியிடுவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த இரண்டு படங்களையும் விட்டுவிட்டு புதிதாக மாளவிகா மோகனன் உடன் இணைந்து ராஜாசாப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யா இல்லனா என்ன!.. என்கிட்ட வாங்க!.. ஹிட் பட இயக்குனருக்கு ரூட்டு போட்ட தனுஷ்!..

மேலும் அந்தப் படத்தை முடித்து விட்டாவது சலார் 2 மற்றும் கல்கி 2 படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது என்கின்றனர். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் படத்தில் நடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிரபாஸ் நடித்துக் கொண்டு போனால் சலார் 2 மற்றும் கல்கி 2 படங்கள் வெளியாகுமா? ஆகாதா? தமிழில் இப்படித்தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் எல்சியூவை ஆரம்பித்து விட்டு அம்போவென விட்டு மற்ற படங்களில் பிசியாகி விட்டனர். அதே வேலையை பிரபாஸ் ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியன் சினிமாவிலேயே சாதனை படைத்த ‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க

google news
Continue Reading

More in Cinema News

To Top