
Cinema News
ஒரே மஜாவாத்தான் இருக்கீங்க- பார்வதி போட்டோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்
அபு தாபியில் பிறந்த கேரளத்து பைங்கிளி பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்துவந்தவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். பின்னர் அதன்மூலமாக மலையாள சினிமாவில் நுழைந்த இவர் ‘Poppins’ என்ற படத்தில் நடித்தார்.
பின்னர் 2015ல் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், அனுஸ்கா, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக வில்லத்தனமான வேடத்தில் நடித்திருந்தார்.

parvati nair
அதன்பிறகு இவர் உத்தம வில்லன், மலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா மற்றும் சீதகாதி ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
பட வாய்ப்புகளை குறைந்ததையடுத்து பார்வதி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் குட்டி மேலாடை மற்றும் குட்டி ட்ரவுசர் அணிந்து வளைத்து வளைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஒரே மஜாவாத்தான் இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

parvati nair
தற்போது பார்வதி நாயர் கைவசம் இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே உள்ளது. இது தவிர 83 என்கிற ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் ஹிந்தி படமாகும்.