More
Categories: Entertainment News

உன்ன பார்த்தவுடனே அப்படித்தான் தோணுது!… நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்…

ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் திரையுலகில் வாய்ப்பை பெறுவதற்காகவும் வளரும் நடிகைகள் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

Advertising
Advertising

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: வர வர கவர்ச்சி கூடிட்டே போகுது!… ஸ்லிம் பியூட்டியாக மாறிய பிரியாமணி….

இந்நிலையில்,சிவப்பு நிற புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘உன்ன பாத்தவுடனே லவ் பண்ண தோணுது’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts