Connect with us
vishal

Cinema News

எல்லாம் போச்சே!.. பெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!.. கைவிட்ட திரையுலகம்!..

சினிமா உலகை பொறுத்தவரை ஒருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கியம். நம்பிக்கையை காப்பாற்றாமல் போனால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாது. ஏனெனில், சினிமா கோடிகளை கொட்டி நடத்தப்படும் ஒரு வியாபாரம். பண விஷயத்தில் சரியாக இருந்தால் மட்டுமே அங்கே நீடிக்க முடியும்

இப்போதும் பல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களை தயாரிப்பதற்கு காரணம் பண விஷயத்தில் அவர்கள் கடைபிடிக்கும் நாணயம்தான். இந்நிலையில், நடிகர் விஷால் லைக்கா நிறுவனத்துக்கு கொடுத்த குடைச்சலால் திரையுலகின் நம்பிக்கையை இழந்திருக்கிறார்.

இதையும் படிங்க: லைக்காவுடன் மீண்டும் பஞ்சாயத்து! – இந்தியன் 2-வை டீலில் விட்ட உலக நாயகன்…

சில வருடங்களுக்கு முன்பு லைக்கா தயாரிப்பில் விஷால் ஒரு படம் நடிப்பதாக இருந்து அதற்காக லைக்கா சில கோடிகளை அவருக்கு அட்வான்ஸாக கொடுத்தது. ஆனால், லைக்காவுக்கு விஷால் படம் நடித்து கொடுக்கவே இல்லை. தொடர்ந்து அவரிடம் கால்ஷீட் கேட்டு வெறுத்துப்போன லைக்கா ஒருகட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விஷாலும் பதிலுக்கு வழக்குபோட்டு லைக்காவை அலையவிட்டார். இப்போது வரை அந்த வழக்கு நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டு இருக்கிறது. லைக்காவுக்கு விஷால் படம் நடித்து கொடுக்கவே இல்லை. அதோடு, கடந்த சில வருடங்களாகவே விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஓடுவதில்லை.

இதையும் படிங்க: இந்த நெருக்கடிதான் காரணமா? ‘விடாமுயற்சி’-க்கு வைக்கப்பட்ட செக்.. சுதாரித்துக் கொண்ட லைக்கா

இடையில் ‘மார்க் ஆண்டனி’ படம் மட்டும் ஓடியது. அதுவும் எஸ்.ஜே.சூர்யாவுக்காகத்தான். சில வருடங்களுக்கு முன்பு விஷால் தயாரிப்பில் மிஷ்கின் இயக்க துவங்கிய படம்தான் துப்பறிவாளன் 2. ஆனால், விஷாலுடன் சண்டை வந்து அப்படத்தை நான் இயக்க மாட்டேன் என சொல்லிவிட்டார் மிஷ்கின்.

தற்போது அதை நானே இயக்குகிறேன் என களம் இறங்கினார் விஷால். ஆனால், விஷாலை நம்பி பைனான்ஸ் செய்ய யாரும் முன்வரவில்லையாம். எனவே, படத்தையே டிராப் செய்து விடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம், இப்படியே போனால் இனிமேல் விஷால் சொந்த தயாரிப்பில் படம் எதுவும் எடுக்க முடியாது என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top