Categories: latest news

கேரளாவில் அடுத்த விக்கெட்!.. நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!..

Nivin pauly: பாலியல் புகாரில் மலையாள நடிகர்கள் சிக்கி வருவது கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமா உலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆராய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியும் அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், அதில் என்னென்ன சொல்லி இருந்தது என்கிற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில்தான், அதில் இருந்த தகவல்கள் சமீபத்தில் வெளியே கசிந்து கேரள திரையுலகை அசைத்து போட்டது. நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, பாபுராஜ், முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, எடவேல பாபு மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீது திரையுலகை சேர்ந்த சில பெண்கள் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அம்மா என அழைக்கப்படும் கேரள நடிகர் சங்கத்தில் தலைவர் மோகன்லால் மற்றும் பலரும் தங்களின் பதிவியை ராஜினாமா செய்துவிட்டனர். நடிகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததற்கு நடிகை பார்வதி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிவின்

ஆனால், விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் என்ன சொல்ல முடியும் என சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார் மோகன்லால். ஒருபக்கம், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி போல ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், பிரேமம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நிவின் பாலியும் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியிருக்கிறார். பட வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி வெளிநாட்டில் வைத்து தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

இதன்பேரில் எர்ணா குளத்தில் உள்ள காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பாலியல் புகாரில் முக்கிய நடிகர்கள் சிக்கி வருவது கேரள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago