எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு...

MGR-Sivaji
இரு பெரிய நடிகர்களுக்குள்ளும் சண்டை இருப்பது போல காட்டிக் கொண்டால் தான் அவர்களது படம் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடும். இது காலாகாலமாகவே நடந்து வருகிறது.
இது திட்டமிட்ட வேலை தான்.
அந்தக் காலத்தில் தமிழ்த்திரையுலகில் தியாகராஜ பாகவதருக்கும், பி.யு.சின்னப்பாவுக்கும் கடும் போட்டி நடந்தது என்பார்கள். சின்னப்பாவுக்கு பாட வரும். நடிக்க வரும். நல்லா சண்டை பண்ணுவாரு. பார்க்க நல்லா இருக்க மாட்டாரு.
இதையும் படிங்க... 2023ல் இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!.. கெத்து காட்டும் ‘ஜெயிலர்’..
அதே நேரம் பாகவதர் நல்லா பாடுவாரு. தகதகன்னு மின்னுற கலர். கவர்ச்சியா இருப்பாரு. ஆனா நடிக்க வராது. இரண்டு பேருக்கும் போட்டி வரும். இதுல பாகவதர் எம்ஜிஆர்னா, சின்னப்பா சிவாஜி. அதன்பிறகு வந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி கமல், அஜீத், விஜய் இவர்களது படங்கள் ஒரு போட்டி மயமாகவே வந்தவண்ணம் உள்ளன.
உண்மையில் பார்க்கப் போனால் எம்ஜிஆர், சிவாஜி ரொம்பவே நட்புள்ளவர்கள். ஒரே வீட்டில் சாப்பிட்டவர்கள். இப்படி முன்னணி நடிகர்களுக்குள் போட்டி நிலவுவதைப் போல ஒரு வேலையைச் செய்வார்களாம். அப்போது தான் ரசிகர்களுக்குள் ஒரு ஈடுபாடு இருக்கும். ஒரு கெத்து இருக்கும். அந்த நாயகர்களின் படத்தையும் பார்க்க ஆர்வம் வரும். சிவாஜிக்கு 50 அடி கட்வுட்னா, எம்ஜிஆருக்கு 60 அடி கட் அவுட் வைப்பார்கள். இப்படி பேனர் போட்டி நடக்கும்போது டி.ஆர்.சந்துரு இருவரையும் கிண்டல் செய்தாராம்.
இதையும் படிங்க... எங்க ரெண்டு பேரையும் இருட்டுல இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனர் எஸ்ஏசி
அவர் தான் தமிழ்நாட்டுலயே கட் அவுட் கலாசாரத்தைக் கொண்டு வந்தவர். ஆரவல்லி என்ற படத்தில் நடித்தது ஈஸ்வர் என்ற புதுமுக நாயகன். கதாநாயகி ஜீவா லட்சுமி. இவருக்கு 60 அடி உயரத்துல கட் அவுட். மோகனா என்ற இன்னொரு கதாநாயகிக்கு 50 அடி உயரம். இப்படி நடிகைகளுக்குக் கட் அவுட் வைத்து எம்ஜிஆர், சிவாஜியைக் கிண்டல் செய்தாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், டாக்டர் காந்தாராஜ் தெரிவித்துள்ளார்.