Connect with us
dharani

Cinema News

ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்து லைஃப்-ஐ தொலைத்த 5 இயக்குனர்கள்!.. படம் பண்ணி பல வருஷம் ஆச்சே!..

திரையுலகில் நடிப்போ அல்லது இயக்கமோ வாய்ப்பு என்பது சுலபமான விஷயம் இல்லை. சினிமா குடும்ப பின்னணி இருந்தால் வாய்ப்புகளை சுலபமாக பெற்றுவிட முடியும். இல்லையென்றால் போராடி வாய்ப்பை பெற வேண்டும். சினிமாவில் ஒரு படத்தை இயக்கிவிட்டு அது வெற்றி பெறாமல் போய் சினிமாவிலிருந்தே காணாமல் போன பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

அதேநேரம், முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சில இயக்குனர்கள் ஒரு படத்தை தோல்விப்படமாக கொடுத்த்துவிட்டு பல வருடங்களாக படங்களை இயக்காமல் கஷ்டப்பட்டு வரும் நிலையும் கோலிவுட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட சில இயக்குனர்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். மேலும், சர்வம், பட்டியல் என சில படங்களை இயக்கி இருக்கிறார். ஆரம்பம் படத்திற்கு பின் 2015ம் வருடம் யட்சன் என்கிற படம் வெளியானது. அதோடு சரி. அந்த படம் தோல்வி என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஹிந்தியில் 2 படங்களை இயக்கிவிட்டு இப்போது அஜித் எப்போது அழைப்பார் என காத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி என வெற்றிப்படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. அதன்பின் அவர் இயக்கிய ஜீ, பீமா உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. சூர்யாவை வைத்து எடுத்த அஞ்சான் படமும் ஊத்திகொண்டது. மீண்டும் விஷாலே கால்ஷீட் கொடுத்து சண்டக்கோழி 2 வெளியானது. அதுவும் ஓடவில்லை. அதுதான் லிங்குசாமி இயக்கிய கடைசி தமிழ் படம். அதன்பின் 4 வருடங்கள் கழித்து தி வாரியர் என படம் இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியான அந்த படம் ஓடவில்லை. இப்போது எந்த நடிகரும், தயாரிப்பாளரும் லிங்குசாமி பக்கம் செல்லவில்லை. வாய்ப்பு எப்போது வரும் என காத்திருக்கிறார் லிங்குசாமி.

இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…

விக்ரமை வைத்து தில், தூள், விஜயை வைத்து கில்லி, குருவி ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தரணி. கடைசியாக சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை இயக்கினார். இப்படம் 2011ம் வருடம் வெளியானது. அதன்பின் 12 வருடங்களாக தரணி எந்த படத்தையும் இயக்கவில்லை. எனவே, பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். அதேநேரம் அவர் இயக்கிய கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்போது வசூலில் சக்கை போட்டு போட்டு வருகிறது. இதில் கிடைக்கும் லாபத்தில் கொஞ்சம் தரணிக்கு கொடுக்கலாம் என சிலர் சொல்லி வருகிறார்கள்.

ராம், மௌனம் பேசியதே படங்களை இயக்கிவிட்டு பருத்தி வீரன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் அமீர். இவர் இயக்கத்தில் கடைசியாக ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து ஆதி பகவான் என்கிற படம் 2013ம் வருடம் வெளியாகி தோல்வி அடைந்தது.

அதன்பின் கடந்த 10 வருடங்களாக இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. எனவே, நடிகராகி விட்டார். இவரின் நடிப்பில் உருவான ‘இறைவன் மிகப்பெரியவன்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல், இயக்குனர் சேரனும் கடைசியாக இயக்கிய திருமணம் எனும் படம் ஹிட் அடிக்காத காரணத்தால் இதுவரை எந்த புதிய படத்தையும் அவர் இயக்கவில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top