Categories: latest news

இந்திப் படத்தில் இருந்து தட்டித் தூக்கிய கண்ணதாசன்… உருவானது சூப்பர்ஹிட் சிவாஜி பாடல்

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கவியரசர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்தக் காலகட்டத்தில் ‘கித்னாபதல் கயல் இன்சான்’ என்ற இந்திப் படம் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்தப் படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டு இருந்தவர் பிரதீப் என்ற வட இந்தியக் கவிஞர். அந்தப் படத்தில் ‘கித்னா பதல் கயல் இன்சான்’ என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது.

கண்ணதாசன் முடிவு: அந்தப் பாடலைப் பற்றி பிரதீப் கண்ணதாசனிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டு இருந்தார். பாடலுக்கான பொருளையும் சொன்னார். அந்தப் பாடலுக்கான பொருள் கண்ணதாசனின் மனதை வருடிக் கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிரதீப் சொன்னதுமே கண்ணதாசன் அதுபோன்ற பாடலை பாவமன்னிப்பு படத்தில் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார்.

இந்திப் பாடல்: கித்னா பதல் கயா இன்சான் என்றால் மனிதன் எவ்வளவு தூரம் மாறிவிட்டான் என்று பொருள். அந்த இந்திப் பாடலின் முதல் வரி போன்று கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலாக உருவெடுத்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மனிதன் மாறவிட்டான்: இந்தப் பாடலில் வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. வான்மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை என்று இயற்கையை வர்ணித்து விட்டு அவை எவையுமே மாறவில்லை. ஆனால் மனிதன் மாறவிட்டான் என்று கடைசி வரியை அசத்தலாகப் போட்டிருப்பார் கண்ணதாசன்.

தீவிர மதப்பற்று: அதே போல நிலை மாறினால் குணம் மாறுவார். பொய் நீதியும் நேர்மையும் தேடுவார். தினம் ஜாதியும் பேதமும் கூறுவார். அது வேதன் விதியென்றோதுவார். மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று மனிதனின் தீவிர மதப்பற்றைப் பறைசாற்றி இருப்பார்.

அதே போல மனிதரில் தான் இந்த ஏற்றத் தாழ்வுகள், மனிதன் எதைக் கண்டு இந்த பணத்தைப் படைத்தான் என்றும் சாடியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். 1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, தேவிகா இணைந்து நடித்த படம் பாவ மன்னிப்பு. எம்எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை.

அத்தான் என்னத்தான், எல்லோரும் கொண்டாடுவோம், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும் பழமிருக்கும், சிலர் அழுவார், வந்த நாள் முதல் ஆகிய மனது மறக்காத பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

18 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago