Categories: latest news

இது நடக்கும்போது சினிமால இருக்க மாட்டேன்!. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன விக்ரம்!…

Chiyan Vikram: சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என பல வருடங்கள் போராடியவர் சியான் விக்ரம். மீரா, தந்து விட்டேன் என்னை என சில படங்களில் நடித்தார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை. மீரா படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதே தவிர படம் ஓடவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்கப்போனார் விக்ரம்.

மலையாளத்தில் சுரேஷ் கோபி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் பிரபலமான ஹீரோவாக மாற வேண்டும் என்கிற ஆசை அவரிடம் இருந்து வந்தது. அதோடு, வித்தியாசமான கெட்டப்புகளில், வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற தாகமும் அவருக்கு இருந்தது.

ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பிரபுதேவா, பிரபாஸ், வினித் போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து வந்தார். அஜித்துடன் உல்லாசம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை. இடையில் பைக் விபத்தில் சிக்கி 3 வருடங்கள் படுக்கையில் இருந்தார். ‘இனிமேல் நீங்கள் நடக்கவே முடியாது’ என்று கூட மருத்துவர்கள் சொன்னார்கள்.

ஆனால், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து மீண்டு வந்தார் விக்ரம். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படம் அவர் ஆசைப்பட்டதை துவங்கி வைத்தது. அதன்பின் தில், தூள், சாமி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விக்ரம் மாறியிருக்கிறார்.

விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்ரம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லியிருந்தார்.

ஒவ்வொரு நாளும் கண்ணாடி பார்க்கும்போது என் முகம் புதிதாக தெரிய வேண்டும் என நினைப்பேன். சினிமாவிலும் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் அப்படி அமைய வேண்டும் என்பதே என் ஆசை. அதனால்தான் காசி, பிதாமகன், சாமி போன்ற வித்தியாசமான வேடங்களில் நடித்தேன்.

என் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ‘விக்ரம் ஒரே மாதிரி இருக்கிறார்.. நடிக்கிறார்’ என்கிற எண்ணம் வந்துவிடக்கூடாது. பல வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எப்போது ‘எல்லா வேடத்திலும் நடித்துவிட்டோம். இனிமேல் நடிக்க வேஷமே இல்லை’ என்று என்னைக்கு எனக்கு தோன்றுகிறதோ அன்றைக்கு சினிமாவில் நான் இருக்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago