Categories: latest news

சௌந்தர்யா மரணத்தில் அந்த நடிகருக்கு தொடர்பா?!.. ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் இதுவா?!..

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சௌந்தர்யா. நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த பொன்னுமணி படம் மூலம் நடிக்க துவங்கினார். அழகாக இருப்பதோடு, நன்றாக நடிப்பதால் இவருடன் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்பட்டனர். பல இயக்குனர்களும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைத்தனர்.

மேலும், ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம், விஜயகாந்துடன் தவசி, கமலுடன் காதலா காதலா போன்ற படங்களிலும் நடித்தார். தெலுங்கில் உருவாகி தமிழில் ஹிட் அடித்த அம்மன் படத்திலும் நடித்திருந்தார். மிகவும் இன்னசண்டான முகம் கொண்ட சௌந்தர்யா அபாரமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

90களில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரங்களையும் செய்தார். 2004ம் வருடம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் பெங்களூரில் இருந்து கரீம் நகருக்கு போனபோது இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சௌந்தர்யா மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரின் மரணம் பற்றி ஆந்திராவை சேர்ந்த ஒருவர் பீதி கிளப்பியிருக்கிறார். ஆந்திரா போலீசுக்கு அவர் எழுதியுள்ள புகாரில் ‘ஹைதரபாத் ஷாம்ஷாபாத்தில் உள்ள ஜல்லேபள்ளியில் சவுந்தர்யா ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய விருந்தினர் மாளிகையை கட்டினார். அதன் இப்போதைய மதிப்பு 100 கோடி வரும். அந்த மாளிகையை தனக்கு விற்குமாறு தெலுங்கு நடிகர் மோகன்பாபு சவுந்தர்யாவிடம் கேட்டார். ஆனால், சவுந்தர்யா அதற்கு சம்மதிக்கவில்லை.

மேலும், சவுந்தர்யாவின் சகோதரரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மோகன்பாபுதான் சவுந்தர்யாவின் மரணத்திற்கு காரணமாக இருந்தார். எனவே, போலீசார் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மோகன் பாபு விளக்கமளிப்பாரா என்பது தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago