Categories: latest news

எம்.ஆர்.ராதாவுக்கு 5 பொண்டாட்டினு சொல்றான்!.. ஆனா அதுக்கும் மேல!.. ராதாரவி ஓப்பன் பேட்டி!..

MR Radha: நாடகங்களில் பல புரட்சிகரமான கருத்துக்களை சொன்னவர் எம்.ஆர்.ராதா. கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியாரை பின்பற்றியவர். திராவிட கழத்தில் பற்று கொண்டிருந்தார். பெரியார் என்னவெல்லாம் சொன்னாரோ அதையெல்லாம் தனது நாடகங்களில் காட்சிகளாக காட்டியவர். கடவுளை எம்.ஆர்.ராதா விமர்சித்தது போல இதுவரை யாரும் விமர்சித்திருக்க மாட்டர்கள்.

பெரியார் கடவுளை நாகரீகமாக திட்டினார் என்றால் எம்.ஆர்.ராதா தனது நாடகளில் கடவுளையும், கடவுளை வணங்கும் நபர்களையும் எல்லை தாண்டி கிண்டலடிப்பார். அவர் நடிப்பில் வெளியான இரத்தக் கண்ணீர் திரைப்படம் கூட முதலில் நாடகமாக உருவானதுதான். பல நூறு முறை அந்த நாடகத்தில் நடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.

எம்.ஆர்.ராதா வெளிநாட்டின் வளர்ச்சியை இந்தியாவோடு ஒப்பிட்டு அடிக்கடி பேசுவார். நாமெல்லாம் இன்னமும் வளரவே இல்லை. நம்மிடம் அறிவே இல்லை என பல படங்களில் நக்கலாக பேசியிருக்கிறார். இரத்தக்கண்ணீர் படத்திலேயே இது போல பல காட்சிகள் இருக்கும். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல வேடங்கள் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் பல படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் கலக்கி இருக்கிறார். 60களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்தார் அவர். கோபம் வந்தால் உடனே துப்பாக்கியை எடுத்து சுட வேண்டும் என நினைப்பார். அப்படித்தான் எம்.ஜி.ஆரை சுட்டு சிறைக்கு சென்றார்.

சொந்த வாழ்வில் பல பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டார். இவரின் வாரிசுகளில் ராதாரவி, ராதிகா, நிரோஷா, எம்.ஆர்.வாசு என பலரும் சினிமாவில் இருக்கிறார்கள். எம்.ஆர்.ராதா பற்றிய யுடியூப் சேனல்களில் பலரும் பல செய்திகளை சொல்வதுண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘என் அப்பா எம்.ஆர்.ராதா 5 பொண்டாட்டி கட்டி கெத்தா வாழ்ந்தாருன்னு ஒரு யுடியுப் சேனலில் போட்ருக்கான். அவனுக்கு தெரியாது. 5 பொண்டாட்டிலாம் குறைச்சல்.. இன்னும் நிறைய இருக்கு’ என ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.

அதேபோல், என் அப்பா எந்த பெண் மீது ஆசைப்பட்டாலும் அவரை திருமணம் செய்துகொள்வதோடு சொத்தையும் எழுதி வைத்திருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்றியது இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

22 hours ago