Categories: latest news

ஓகே சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன ரஜினி!.. இப்ப வரைக்கும் படாதபாடு படும் இயக்குனர்!…

Rajinikanth: ஒரு இயக்குனர் ஒரு கதையை எழுதும்போது ஒரு நடிகரை மனதில் நினைத்து எழுதுவார். அந்த நடிகரிடம் கதையும் சொல்வார். ஆனால், அந்த நடிகர்தான் அந்த கதையில் நடிப்பார் என சொல்ல முடியாது. அந்த கதை வேறு ஒரு நடிகருக்கும் போதும். எந்த நடிகர் நடிக்கிறாரோ அவருக்கு ஏற்றார் போல கதையில் மாற்றம் செய்வார் இயக்குனர்.

சில சமயம் ஒரு கதை அந்த நடிகருக்கு பிடித்திருந்தாலும் வேறு படங்களில் நடிக்க ஒப்புகொண்டிருப்பதால் அந்த இயக்குனரை சில மாதங்கள் காத்திருக்க சொல்வார். ஆனால், எல்லா இயக்குனர்களும் அப்படி காத்திருக்க மாட்டார்கள். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன்.

காக்க காக்க: முதல் படமே வெற்றி என்பதால் இரண்டாவதாக சூர்யாவை வைத்து காக்க காக்க படத்தை இயக்கினார். முதல் படத்தை தயாரிப்பாளருக்காக எடுத்ததால் காக்க காக்க படத்தை முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் எடுத்தார். இந்த படம்தான் சூர்யாவை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதோடு, கவுதம் மேனன் ஒரு ஸ்டைலீசான இயக்குனர் என்றும் காட்டியது.

துருவ நட்சத்திரம்: அதன்பின் சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் படத்தையும் எடுத்தார் கவுதம் மேனன். சூர்யாவுக்கே மிகவும் பிடித்த படம் அது. அதன்பின் துருவ நட்சத்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதையை எழுதி சூர்யாவிடம் சொன்னார் கவுதம் மேனன். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை.

சியான் விக்ரம்: அதன்பின் விக்ரமிடம் சொல்லி அந்த கதையை எடுத்தார் கவுதம் மேனன். இந்த படம் உருவாகி 4 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை படம் வெளியாகவில்லை. கவுதம் மேனன் வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் இந்த படம் வெளியாகவில்லை. இப்போது மதகஜராஜா ஹிட் அடித்திருக்கும் நிலையில் துருவ நட்சத்திரத்தையும் படத்தையும் ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.

விக்ரமுக்கு முன்பு இந்த கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அவரின் வயதுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்தே சொல்லியிருக்கிறார். கவுதம் மேனன் சொன்னது ஒரு ஸ்பை திரில்லர் கதை என்பதால் தமிழுக்கு இது செட் ஆகுமா என்கிற தயக்கம் ரஜினிக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்துள்ளார். காலையில் நடிக்கிறேன் என சொன்னவர் மாலையே கவுதம் மேனனை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அப்போது பா.ரஞ்சித் சொன்ன கபாலி கதையை ஓகே செய்து அதில் நடித்தார் ரஜினி.

அதன்பின் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து முடித்து இப்போது வரை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்து வருகிறார் கவுதம் மேனன். விரைவில் இப்படம் வெளியாகும் என்றே நம்பலாம்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago