Categories: latest news

காதல் கோட்டை படத்தில் நடிக்க வேண்டியது இவரா?!.. இது லிஸ்ட்லயே இல்லயே!…

Kadhal Kottai: அகத்தியன் இயக்கத்தில் அஜித் – தேவயாணி நடித்து 1996ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காதல் கோட்டை, கதாநாயகனும், கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே கடிதம் மூலம் காதலித்துக் கொள்வார்கள். படத்தின் இறுதிக்காட்சியில்தான் இருவரும் சந்திப்பார்கள் என்பதுதான் படத்தின் கதை. வளரும் நேரத்தில் அஜித்துக்கு காதல் கோட்டை ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை அகத்தியன் வாங்கினார்.

காதல் கோட்டை படத்தில் ஹீரா, தலைவாசல் விஜய், கரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், இந்த படம் பல நடிகர்களை தாண்டியே அஜித்திடம் வந்தது. அது பற்றி பார்ப்போம்:

இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடமும் இந்த கதையை சொன்னார். ஆனால், யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. கதாநாயகனும், கதாநாயகியும் படம் முழுக்க சந்திக்காமலேயே இருந்தால் ரசிகர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அவர்கள் நினைத்தார்கள். விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூட அகத்தியன் கதை சொன்னார். அவர் சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால் உடனே ஷூட்டிங் துவங்க வேண்டிய சூழ்நிலை என்பதால் விஜய் அதில் நடிக்கவில்லை.

எனவே, சீரியல் நடிகர் அபிஷேக்கை போட்டு படத்தை எடுத்தார் அகத்தியன். பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில், அந்த தயாரிப்பாளருக்கும், அகத்தியனுக்கும் இடையே முட்டிக்கொண்டது. இதுபற்றி பேட்டில் ஒன்றில் சொன்ன அபிஷேக் ‘பிரச்சனை ஆனதும் நான் மும்பை சென்றுவிட்டேன். 10 மாதங்கள் கழித்து வந்து பார்த்தால் அந்த படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அஜித் நடித்திருந்தார். படம் பார்த்துவிட்டு அழுதுவிட்டேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை’ என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சித்தப்பு சரவணன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘காதல் கோட்டை கதை என்னிடமும் வந்தது. அகத்தியனை கூட்டிக்கொண்டு சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல வைத்தேன். நிறைய ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என சொல்வார்கள். அதைக்கேட்டு அகத்தியன் வெளியே போய்விடுவார். ஒருமுறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸும் கொடுத்தார். ஆனால், அதுவும் நடக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

காதல் கோட்டைக்கு முன்பே அஜித்தை வைத்து வான்மதி படத்தை இயக்கியிருந்தார் அகத்தியன். அந்த படத்தை தயாரித்தது சிவசக்தி பாண்டியன் என்கிற தயாரிப்பாளர். யாரும் செட் ஆகவில்லை என்பதால் அவரிடம் பேசி அஜித்தை வைத்தே படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் அகத்தியன்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago