Categories: latest news

நம்பி கொடுத்தேன்!.. அட்வான்ஸ் வாங்கிட்டு விஜய் ஏமாத்திட்டார்!.. புலம்பும் தயாரிப்பாளர்!..

Actor Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அப்பாவிடம் சொல்ல அவரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பல நாட்கள் அடம்பிடித்து விஜய் அதில் உறுதியாக இருக்க அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே தனது சொந்த காசை போட்டு படத்தை தயாரித்து ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தில் விஜயை அறிமுகம் செய்து வைத்தார்.

விஜய் ரசிகன்: அந்த படம் ஓடவில்லை. கவர்ச்சி இருந்தால்தான் படம் ஓடும் என்பதை புரிந்துகொண்ட எஸ்.ஏ.சி அடுத்து ரசிகன் என்கிற படத்தை இயக்கி அதில் சங்கவியை களமிறக்கி கவர்ச்சி விருந்து வைத்தார். ஒரு காட்சியில் சங்கவின் அம்மா ஸ்ரீவித்யாவுக்கே முதுகில் சோப்பு போடும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார் விஜய்.

எனவே, அந்த படம் ஹிட் அடித்தது. ஆனாலும், மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விஜயை வைத்து படமெடுக்க முன்வரவில்லை. பலரிடமும் சென்று தன மகனுக்காக வாய்ப்பு கேட்டார் எஸ்.ஏ.சி. எல்லோரும் தயங்கினார்கள். சத்தியராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களிடம் சென்று என் மகனை உங்கள் தம்பியாக நடிக்க வையுங்கள் என்றெல்லாம் கேட்டார்.

விஜயகாந்த்: அது நடக்கவில்லை. அப்போதுதான் விஜயகாந்த் அவருக்கு உதவி செய்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். அந்த படம்தான் விஜயை ‘சி’ செண்டர்களிலும் கொண்டு சேர்த்தது. அதன்பின் காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் விஜய்.

ஒருகட்டத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக விஜய் மாறி இவர்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் பேசும் அளவுக்கு முன்னேறினார். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய நிலையில் அரசியலிலும் நுழைந்திருக்கிறார். அவர் அரசியலிலேயே நீடிப்பாரா இல்லை மீண்டும் சினிமாவுக்கு திரும்புவாரா என்பதை 2026 சட்டமன்ற தேர்தலே முடிவு செய்யும்.

விஜய்: இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சொந்த தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்த விஜய் முதன் முதலாக எங்களின் தயாரிப்பில் விஷ்ணு படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் ஆனது. அதனால், மீண்டும் எங்களின் தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் நடிப்பதாக பேசப்பட்டு அவருக்கு ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம். பணத்தை வாங்கிக்கொண்டு விஜய் படத்தில் நடிக்கவே இல்லை. 9 வருடங்களுக்கு பின் அந்த ஒரு லட்சத்தை திருப்பி கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago