Categories: latest news

தளபதி படத்தில் மணிரத்னம் என்னை அழ வச்சாரு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன ஷோபனா!…

Thalapathy: 80களில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஷோபனா. சிவாஜியுடன் பல படங்களிலும் நடித்த நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினர் இவர். இவரின் குடும்பமே பரத நாட்டியத்திற்கு பெயர் போனவர்கள். ஷோபனாவும் அற்புதமாக பரதநாட்டியம் ஆடுவார். 80களில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ் என பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

ரஜினியுடன் சிவா, தளபதி ஆகிய படங்களிலும், கமலுடன் எனக்குள் ஒருவன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். விஜயகாந்துடன் பொன்மன செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நாட்டியத்தின் மீது இருந்த ஆர்வத்தில் அதற்காக தனது வாழ்க்கையையே ஷோபனா தியாகம் செய்துவிட்டார்.

அதாவது ஷோபனா இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. பல நாடுகளுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல் ஆகியோர் நடித்து வெளியான கல்கி 2898 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்த திரைப்படம் தளபதி. ரஜினி ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட்டாக இருப்பது இந்த படம். இந்த படத்தில் ரஜினியை வித்தியாசமாக நடிக்க வைத்திருப்பார் மணிரத்னம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது மணிரத்னம் எதிர்பார்ப்பதை செய்ய முடியாமல் ரஜினியே தடுமாறினார்.

அதன்பின் கமலின் அறிவுரைப்படி மணிரத்னத்தை நடித்து காட்ட சொல்லி அப்படியே நடித்தார். அதேபோல், ஷோபனாவுக்கும் நல்ல வேடம் அமைந்தது. ரஜினியும், ஷோபனாவும் வரும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் இளையராஜாவின் சிறந்த மெலடி பாடலாக அமைந்தது.

இந்நிலையில் ஊடகமொன்றில் பேசிய ஷோபனா ‘ தளபதி படத்தில் நடிக்கும்போது எனக்கு 20 வயது. மலையாளத்தில் 20 நாட்களில் ஒரு படம் முடிந்துவிடும். ஆனால், தளபதி படத்தை அதிக நாட்கள் எடுத்தார் மணிரத்னம். நான் கொடுத்த கால்ஷீட்டை தாண்டி போனது. மணிரத்னம் வருவாரு. ‘இன்னும் கொஞ்சம் ஷூட் பண்ணனும். இன்னைக்கு வேண்டாம். நீங்க நாளைக்கு வீட்டுக்கு போகலாம்’ என சொல்லுவார். இப்படியே சொல்லி சொல்லி 2 நாட்கள் போய்விட்டது. ஒரு கட்டத்தில் நான் அழுதே விட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago