Categories: latest news

பாலசந்தர் சொன்னது வேற.. ஸ்ரீதேவி சொன்னது வேற! விழுந்து விழுந்து சிரித்த கமல்

சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி: 1967 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. எண்பதுகள் காலகட்டத்தில் இவர்தான் அனைவருக்குமான ஸ்ரீ தேவியாக இருந்தார். தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். தமிழ் மட்டுமல்ல ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாகவே திகழ்ந்தார்.

ரஜினியை பழிவாங்க: ரஜினி கமல் இவர்களின் ஆஸ்தான நடிகையே ஸ்ரீதேவி தான். இருவருடனும் சேர்ந்து கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். தமிழில் முதன் முதலில் இவர் ஹீரோயினாக அறிமுகமானது மூன்று முடிச்சு திரைப்படத்தில் தான். அந்த படத்தில் ரஜினி வில்லனாக நடித்திருப்பார். அவரை பழி வாங்கும் எண்ணத்தில் ரஜினியின் அப்பாவையே திருமணம் செய்து கொள்வார் ஸ்ரீதேவி.

மூக்குத்தி பிரபலம்: அந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 13 வயது தான். அது மட்டுமல்ல இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான நடிகையும் கூட. இவர் ஹீரோயினாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி மூக்குத்தி என்பது மிகவும் பிரபலமானது. ஏனெனில் படத்தில் இவர் மூக்குத்தி இல்லாமல் நடித்ததே கிடையாது. அந்த அளவுக்கு இவருக்கு மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கும் .

அந்த ஒரு காட்சி: குடும்ப பாங்கான ஒரு முகம், கவர்ச்சி இல்லாத தோற்றம் என அனைவரையுமே வெகுவாக கவர்ந்தார். இந்த நிலையில் மூன்று முடிச்சு படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை ஒரு பழைய பேட்டியில் கூறி இருக்கிறார் ஸ்ரீதேவி. அந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சி. ரஜினி போட் ஒட்டிக்கொண்டு வருவார். கமலும் ஸ்ரீதேவியும் அதில் உட்கார்ந்து இருப்பார்கள்.

திடீரென கமலை போட்டில் இருந்து தண்ணீருக்குள் தள்ளிவிடுவார் ரஜினி. அதன் பிறகு கோபத்தில் வேகமாக போட்டை ஓட்டுவது மாதிரியான காட்சி. கமல் விழுந்ததும் ஸ்ரீதேவி ஐயோ போயிட்டாரே போயிட்டாரே என கத்த வேண்டும். ஆனால் ஸ்ரீதேவி கமல் விழுந்ததும் ஐயோ பூட்டாரே, பூட்டாரே என சென்னை பாஷையில் கத்தி இருக்கிறார். உடனே போட்டை பிடித்து கீழே தூங்கிக் கொண்டிருந்த கமல் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாராம்.

இதனால் அந்த போட் ஆடியதாம். இது லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. தூரத்தில் இருந்த பாலச்சந்தர் ஐயோ ஏன் போட் ஆடுகிறது என கத்தினாராம். இதை சொல்லும் போதே ஸ்ரீதேவி மிகவும் சிரித்தபடி கூறினார். அரங்கமே சிரிப்பலையில் நனைந்தது. இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன என ஸ்ரீதேவி கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago