Categories: latest news

போதையில ஒருத்தர் கேட்ட கேள்வி!.. ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையே மாறிப்போச்சே!…

AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் அப்பா சேகர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டார் ரஹ்மான்.

திடீரென அப்பா இறந்துவிடவே சிறு வயதிலேயே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ரஹ்மானுக்கு வந்தது. எனவே, இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பல திரைப்படங்களிலும் இசைக் கலைஞராக வேலை பார்த்துள்ளார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கினார்.

முதலில் இவர் இசையமைத்தது விளம்பர படங்களுக்குதான். ரோஜா படத்தில் இவர் கொடுத்த இசை இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அப்போது தேசிய விருது பட்டியலில் இளையராஜாவும் இருந்தார். பாலுமகேந்திரா போட்ட ஒரு ஓட்டு ரஹ்மானுக்கு தேசியவிருதை உறுதி செய்தது.

பெரும்பாலும் மெலடிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேற்கத்தியை இசையை கொடுத்து அதிர வைத்து ஆட்டம் போட வைத்தார் ரஹ்மான். குறிப்பாக அவரின் இசை இளசுகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், திருடா திருடா என அடித்து ஆடினார் ரஹ்மான்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்திக்கும் சென்று கொடி நாட்டினார். ரங்கீலா படத்துக்காக ரஹ்மான் போட்ட இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் பாலிவுட் நடன இயக்குனர்கள் திணறினார்கள். ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக 2 தேசிய விருதுகளை பெற்றார் ரஹ்மான். விருதை கையில் வாங்கிக்கொண்டு ‘எல்லாப் புகழுக்கும் இறைவனுக்கே’ என சொன்னார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரஹ்மான் ‘எனக்கு 19 வயது இருக்கும்போது இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் வேலை செய்தேன். அந்த குழுவில் இருந்த ஒரு கிதார் கலைஞர் ஒருநாள் குடிபோதையில் என்னிடம் ‘ஏன் சினிமா இசையை மட்டுமே வாசிக்கிறாய்.. உனக்கு வேறு எதுவும் தெரியாதா?’ எனக்கேட்டார். அதன்பின்னரே எனது தனித்துவமான இசையை அடையாளம் காணும் பயணம் துவங்கியது’ என சொல்லி இருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago