Categories: latest news

பாட்டி செத்துப் போச்சி!.. ஓ மை கடவுளே படத்துக்கு பிளாஷ்பேக் சொன்ன அஸ்வத் மாரிமுத்து!…

Aswath Marimuthu: சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. அப்பா தயாரிப்பாளராக இருந்தால் சுலபமாக இயக்குனர் ஆகிவிட முடியும். இல்லையெனில் போராட வேண்டும். தரமணி நடிப்பு கல்லூரியில் இயக்கம் பற்றி படித்தவர்கள் குறும்படங்கள் மூலம் தன்னை புரமோட் செய்து கொள்வார்கள். அதை வைத்து ஷங்கர் போன்ற பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சில படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனர் ஆகிவிடுவார்கள்.

குறும்படம் மூலம் வாய்ப்பு: இந்த பின்னணி இல்லாதவர்கள் யாரேனும் இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்ந்துவிடுவார்கள். சிலருக்கு அதுவும் கிடைக்காது. சிலர் குறும்படங்களை இயக்கிவிட்டு யாரிடமும் உதவி இயக்குனராக சேராமல் நேரிடையாக படங்களை இயக்க வந்துவிடுவார்கள். லோகேஷ் கனகராஜெல்லாம் இப்படி வந்தவர்தான்.

பிரதீப் ரங்கநாதன்: இந்த வரிசையில் இயக்குனரானவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் கல்லூரியில் பிரதீப் ரங்கநாதனுக்கு சீனியர். பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்கிய போது அந்த படத்தில் சில நாட்கள் வேலை செய்து அவருக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர். அஸ்வத் இயக்கிய முதல் திரைப்படம் ஓ மை கடவுளே.

அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறு செய்துவிட அதை புரிந்துகொள்ளும் அவனுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்வான் என்பதை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தார்.

டிராகன்: இந்த படம் ஹிட் அடிக்கவே இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்திருக்கிறார். கடந்த 21ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 100 கோடி வசூலை எட்டிவிட்டது. கல்லூரியில் பொறுப்பின்றி சுற்றும் ஒரு இளைஞன் கல்லூரி படிப்புக்கு பின் என்ன ஆகிறான் என்பதுதான் கதை. ஓ மை கடவுளே போலவே இந்த படத்திலும் 2வது வாய்ப்பு என்கிற மேட்டரை வைத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஓ மை கடவுளே: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து ‘என்னுடைய ஷார்ட் பிலிம்ல அசோக் செல்வன் நடிச்சான். படம் முக்காவாசி முடிந்தபின் அவரின் பாட்டி இறந்துட்டாங்க. மழை வேற பயங்கரமா பெய்தது. அதிக பட்ஜெட்ல எடுத்த ஷார்ட் பிலிம் அது. ‘மச்சான் நீ வேணா வேற யாரையாவது வச்சி பண்ணிக்கோ. எனக்காக வெயிட் பண்ணாத’ன்னு சொன்னான். நீ இல்லனா நான் பண்ண மாட்டேன் என சொன்னேன். உடனே அன்னைக்கு நைட்டே கிளம்பி அடுத்தநாள் காலையில வந்துட்டான். அந்த ஷார்ட் பிலிம்க்கு நான் பெஸ்ட் டைரக்டர், அசோக் பெஸ்ட் ஆக்டர் விருதுலாம் வாங்கினோம். அன்னைக்கு என்னுடைய முதல் படம் அசோக் கூடாதான்னு முடிவெடுத்தேன். அதுதான் ஓ மை கடவுளே’ என கூறியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago