Aswath Marimuthu: சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சில இடங்களில் ஈகோ பார்க்காமல் இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கையை விட்டு போய்விடும். இது நடிகர்களுக்கு மட்டுமில்லை. இயக்குனர்களுக்கும் பொருந்தும். அப்பாவின் பின்னணியில் சினிமாவில் வருபவர்களுக்கு இது பொருந்தாது.
ஆனால், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுக நடிகராகவோ, இயக்குனராகவோ வருபவர்கள் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும். பல சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தாண்டி படத்தை எடுத்து, அது ரிலீஸாகி, வெற்றி பெற்றால் மட்டுமே இயக்குனருக்கு அடுத்த படம் கிடைக்கும்.
அப்படி பொறியியல் கல்லூரி மாணவராக இருந்து சினிமாவுக்கு வந்தவர்தான் அஸ்வத் மாரிமுத்து. பிரதீப் ரங்கநாதனும் இவரும் கல்லூரி தோழர்கள் என சொல்லப்படுகிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் வேறு வேலைக்கு செல்லாமல், குடும்பத்திடமும் போராடி குறும்படங்களை இயக்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர்கள்.
பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கூட அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டார். இவரின் சில குறும்படங்கள் அதில் திரையிடப்பட்டது. அதன்பின் சினிமாவுக்காக ஒரு கதையை உருவாக்கினார். பல வருடங்கள் போராடி அசோக் செல்வனை வைத்து ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, அடுத்து பிரதீப்பை வைத்து டிராகன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 21ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.
இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஓ மை கடவுளே ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். ரித்திகா நிறைய தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி அவர் ரெஸ்ட் ரூமுக்கு போவார். அப்படி போகும்போது ரெஸ்ட் ரூம் சுத்தமாக இல்லை என சொல்லிவிட்டார். உடனே அஸ்வத் மாரிமுத்து ரெஸ்ட் ரூமை கிளீன் பண்ணார்’ என சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…