இசை மாமேதை இளையராஜா. கிட்டத்தட்ட சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் கால் பதித்து தன்னுடைய அசாத்திய திறமையால் உலக அளவில் புகழப்படும் ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதோடு தனது சிம்பொனி இசையை லண்டனில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இளையராஜா. அதற்காக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நேரடியாக இளையராஜா வீட்டிற்கு சென்று அவருடைய வாழ்த்தை தெரிவித்து இருந்தார். எவ்வளவோ சாதனைகளை படைத்திருந்தாலும் இன்னும் இசையில் ஏதாவது புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார் இளையராஜா. ஆரம்ப காலங்களில் இவருடைய இசை இல்லாமல் பெரும்பாலான படங்கள் வந்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
ரஜினி, கமல், பிரபு ,சத்யராஜ் ,கார்த்திக் என அத்தனை நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு இன்னொரு காரணமாக இருந்தது இளையராஜாவின் இசை. சில நேரங்களில் இவருடைய இசையால் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ இவரின் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன் வந்திருக்கின்றனர்.
ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைக்கும் அசாத்திய திறமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார் இளையராஜா. அவரைப் பற்றி சமீப காலமாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மிகவும் கோபக்காரர் ,கடுமையானவர் என்றெல்லாம் பல வகைகளில் அவரை விமர்சித்து வருகின்றனர். அதோடு தனது காப்பிரைட்ஸ் உரிமையிலும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவராக இருந்து வந்தார் இளையராஜா.
இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி எம் குமார் இளையராஜாவுக்கும் தனக்கும் இருந்த நட்பை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஜி எம் குமார் இயக்கிய திரைப்படம் அறுவடை நாள். அந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்தப் படத்தில் இவர் இசையமைத்த ஒரு பாடலை டைட்டில் கார்டில் போட்டு விட அதற்கு இளையராஜா கோபப்பட்டார் என்று ஜி எம் குமார் ஒரு பேட்டியில் கூறினார்.
இந்த படத்தில் இளையராஜா இசை அமைத்த பிறகு ஜிஎம் குமாருக்கு தொடர்ந்து 13 படங்களை இயக்கக்கூடிய வாய்ப்பு வந்ததாம் .ஆனால் அந்த 13 படங்களின் தயாரிப்பாளர்களும் இளையராஜா வேண்டாம் என்று கூறி இவருடைய கால்சீட்டை கேட்டார்களாம். ஏனெனில் அப்போது இளையராஜாவுக்கும் அந்த தயாரிப்பாளர்களுக்கும் இடையில் சில ஈகோ பிரச்சனை இருந்ததனால் இளையராஜாவை அவர்கள் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லையாம்.
ஆனால் ஜி எம் குமார் இந்த 13 படங்களிலும் இளையராஜா வேண்டாம் என்றால் அந்த 13 படங்களே வேண்டாம் என வந்த வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டாராம் .இது எப்படியோ இளையராஜாவுக்கு தெரிந்திருக்கிறது. அதன்பிறகு ஒரு நாள் தயாரிப்பாளர் கே ஆர் ஜி இளையராஜாவை சந்தித்து ஒரு படத்தில் இசையமைக்கும்படி கால்ஷீட் கேட்க வந்திருக்கிறார். அப்போது இளையராஜா அந்த படத்திற்கு குமாரை இயக்குனராக போடுங்கள் என்று சொன்னாராம்.
அதற்கு கே ஆர் ஜி ஜிஎம் குமார் வேண்டும் என்றால் நீயே வேண்டாம் என இளையராஜாவை ஒதுக்கிவிட்டு போய்விட்டாராம். இதை ஜி எம் குமாரிடம் இளையராஜா சொல்லும்போது நீ எனக்காக 13 படங்களை விட்டுக் கொடுத்த. உனக்காக ஒரு படத்தை விட்டுக் கொடுத்தேன் என கிண்டலாக கூறினாராம்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…