Categories: latest news

ஒவ்வொரு படத்துலயும் 10 நிமிஷ காமெடி.. தூள் கிளப்பும் ரஜினி! இதன் பின்னணி என்ன தெரியுமா?

ரஜினி நடிகராக மாறி நட்சத்திர அந்தஸ்தை பெற்று சூப்பர் ஸ்டாராக அந்த இடத்தை தொட்டிக் கொண்டிருந்த நேரம். அப்போது பஞ்சு அருணாச்சலம் ரஜினியிடம் ஒரு கதை சொல்கிறார். நம் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஆளுமை கொண்ட ரைட்டர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதை சொல்லும் போது சரி நடிக்கிறேனு சொல்லிவிட்டார் ரஜினி. படமும் ஆரம்பித்து விட்டது.

படம் ஆரம்பித்து ஐந்து , ஆறு நாள்களில் ரஜினிக்கு ஒரு சின்ன நெருடல். ஆஹா.. நம்மள வச்சி செய்றாங்க. வேலைக்கு ஆவாது இந்தப் படம் என நினைத்து இதை யாரிடம் சொல்வது என முழித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. பஞ்சு அருணாச்சலம் தான் நடிக்க சொன்னது. அவருடைய தயாரிப்பு. அதனால் அவரையே கூப்பிட்டு இது ஒன்னும் தேறும்னு தோணல. இது எனக்கான படமா இல்ல.

என்னைய வச்சு இந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கீங்க. மாட்டு வாலை தூக்கி மணி பார்க்கிறேன். சாணிய வச்சு ராட்டி தட்டுறேன். நீங்க ஏதோ காதல் கதைனு சொன்னீங்க. மாதவி இருக்காங்கனு சொன்னீங்க. அப்பா சண்டைனு சொன்னீங்க. அதெல்லாம் பெருசா நிற்கிற மாதிரி தெரியவில்லை. இதற்கு நான் தாங்குவேனா? என பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டிருக்கிறார் ரஜினி.

அதற்கு பஞ்சு அருணாச்சலம் ‘எல்லா ஹீரோக்களுக்கும் ரெண்டு சண்ட வைக்கிறோம். அதற்கு மீறி போனா மூணு சண்ட.உனக்காக ஐந்து சண்ட வைக்கிறோம். இப்போது 1984. இப்பவே ஐந்து சண்டைனா ஐந்து வருடங்கள் கழித்து எத்தனை சண்ட போடுவ நீ? அதனால காமெடி பண்ணு.தில்லு முல்லு படத்துல காமெடி ரோலில் நடிச்சிருக்கீயே. அப்புறம் என்ன?’ என கேட்டாராம்.

இருந்தாலும் ரஜினி கேட்கவே இல்லையாம். சரி இந்தப் படம் ஓடல. இப்போ உனக்கு என்ன பிரச்சினை? என பஞ்சு அருணாச்சலம் கேட்டிருக்கிறார். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களுக்குத்தான் பிரச்சினை. என்ன வச்சு படம் எடுத்து ஓடலைனா உங்களுக்குத்தான் பிரச்சினை என சொன்னாராம் ரஜினி. அதற்கு பஞ்சு அருணாச்சலம் ‘ரைட்.. நான் நஷ்டமடைஞ்சிருக்கிறேன். ஆனா இந்தப் படத்துல நடி. இந்தப் படம் ஓடும். ஆனா இந்தப் படத்துக்கு பிறகு உன்னுடைய கடைசி படம்னு ஒன்னு இருக்கும்ல. அதுவரைக்கும் உன்னால காமெடிய விட முடியாது.’

‘ நீ பதினைந்து நிமிஷம் காமெடி பண்ணிட்டுத்தான் அடுத்த கட்டத்திற்கே போக முடியும். அதனால நீ நடி’ என பஞ்சு அருணாச்சலம் கட்டாயத்தின் பேரில் ரஜினி நடித்த படம்தான் தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம். இந்தப் படத்திற்கு முன்பு வரை ரஜினி ஆக்‌ஷன் ஹீரோவாக பேமிலி ஆடியன்ஸை கவரும் நடிகராக இருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகுதான் அவரின் காமெடி என்பது வெளிச்சத்திறகு வந்தது. இந்த தகவலை கரு பழனியப்பன் ஒரு மேடையில் கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago