Categories: latest news

ரஜினி மாறினால் சினிமாவுக்கு நல்லது!. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன இயக்குனர்!…

Rajinikanth: ரஜினி என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் மாஸ் காட்சிகள், அவர் பேசிய பன்ச் வசனங்கள், ஸ்டைலான அவரின் நடை, அவரின் உடல் மொழி மற்றும் வசனம் பேசும் ஸ்டைல்தான். அதுதான் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது. ரஜினிக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவரை போல ஸ்டைலாக நடிக்கும் நடிகர் இல்லை என்றே சொல்லலாம். சிம்பு போல சிலர் அவரை காப்பி அடித்து முயற்சி செய்தார்கள். ஆனால், கிளிக் ஆகவில்லை.

அதனால்தான் 72 வயதிலும் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் வயதுள்ள நடிகர்ளெல்லாம் அப்பாவாக நடிக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், ரஜினி இப்போதும் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

ரஜினி என்றால் ஸ்டைல்தான் என்றாலும் அது மட்டுமே அவரின் அடையாளம் இல்லை. அபூர்வ ராகங்கள் நடிக்க துவங்கி அவர் மசாலா படங்களில் நடிக்க துவங்குவதற்கு முன்பி வரை பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மூன்று முடிச்சு, ஆடு புலி ஆட்டம், அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போல பல படங்களை சொல்ல முடியும்.

அதேபோல், மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த முள்ளும் மலரும் மற்றும் ஜானி ஆகிய இரண்டு படங்களுமே இப்போதுவரை ரசிகர்களால் சிலாகிக்கப்படும் படங்களாக இருக்கிறது. இந்த படங்களில் எல்லாம் ரஜினிக்குள் இருக்கும் திறமையான நடிகரை ரசிகர்கள் பார்க்க முடியும்.

ஒருகட்டத்தில் கமர்சியல் மசாலா படங்கள் என்கிற ரூட்டுக்கு போய் ரஜினியே இதுபோன்ற கதைகளில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டார். இப்போது வரை இது தொடர்கிறது. இந்நிலையில், ரஜினியை வைத்து ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் மகேந்திரன் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கருத்தை சொன்னார்.

ரஜினியை வைத்து நான் இயக்கிய படங்களில் அவருக்கு அமைந்த கதாபாத்திரங்கள் போல அதன்பின் அவருக்கு கிடைக்கவில்லை. ரஜினி முன் வந்து அதை செய்ய வேண்டும். அதற்கு அவரின் ரசிகர்களும் வழிவிட வேண்டும். அப்படி நடந்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது’ என சொல்லியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா பிடிக்காதவர்தான் மகேந்திரன். குறிப்பாக எந்த ஜீவனும் இல்லாத மசாலா படங்களை அவர் அறவே வெறுத்தார். அதனால்தான் தன்னுடைய படங்களில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் தொடர்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago