Categories: latest news

மௌன ராகம் படத்தில் நான் செய்த தப்பு!.. மனம் திறந்து பேசிய மணிரத்னம்!…

Manirathnam: தமிழ் சினிமாவில் மட்டுமில்லை. இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். நாடகத்தனமான சினிமாக்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் காட்சி மூலம் அழகியலை காட்டியவர் இவர். வசனங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த சினிமாவில் காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்த முடியும் என நிரூபித்து காட்டியவர் இவர்.

இவர் இயக்கிய ரோஜா, பம்பாய், நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் சினிமாவை கற்று கொள்ள விரும்புபவர்களுக்கும், இளைய இயக்குனர்களுக்கும் இப்போதும் ஒரு பாடமாக இருக்கிறது. இவர் எடுத்த இதயத்தை திருடாதே, அலைபாயுதே படங்களை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

இப்போதுள்ள கவுதம் மேனன், ஷங்கர், அட்லீ உள்ளிட்ட பல இயக்குனர்கள் மணிரத்தினத்தின் ரசிகர்கள்தான். மணிரத்னம் போல் காதல் கதைகளை இயக்கியவர் தமிழ் சினிமாவில் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பலர் முயன்றும் திரைப்படமாக எடுக்க முடியவில்லை.

ஆனால், மணிரத்னம் அதை சாதித்து காட்டினார். அவர் இயக்கிய நாயகன் திரைப்படம் கமலின் வாழ்க்கையிலும், இந்திய சினிமாவிலும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. 80களில் மணிரத்னம் சில படங்கள இயக்கியிருந்தாலும் மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மௌனராகம் படம் அவர் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டியது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை பார்த்துவிட்டு சினிமாவுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். இந்த படத்தை உல்டா செய்துதான் அட்லி ராஜா ராணி படத்தை இயக்கினார். இந்நிலையில், மௌன ராகம் படத்தில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என மணிரத்னம் சொல்லி இருக்கிறார்.

மௌன ராகம் படம் ரிலீஸான போது சிட்டியை விட்டு வெளியே உள்ள ஒரு தியேட்டருக்கு அந்த படத்தை பார்க்க போனேன். தியேட்டர் உள்ளே போனதும் முதல் 10 வரிசை காலியாக இருந்தது. சரி நமக்கு அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டேன். படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு ‘என்னடா இது அந்த பொண்ணுக்கு நாலு அடி போட்டிருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்’ என பேசிக்கொண்டே போனாரு.

அவர் சொல்வதை சரி என சொல்லவில்லை. ஆனால், அந்த பாயிண்ட்டை படத்தில் உயர்த்தி காட்டி ஒரு பெண்ணை அடிப்பது என்பது தீர்வு ஆகாது என நான் காட்டியிருக்க வேண்டும். நிறைய திருமண வாழ்க்கையில் அதுபோல ஒரு அணுகுமுறை இருக்கும்’ என அவர் பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago