Categories: latest news

எந்திரன் ஷூட்டிங்கில் ரஜினி செய்ததை யாருமே செய்ய மாட்டாங்க!.. நெகிழும் ஷங்கர்…

Shankar: ரஜினி எப்போதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நடிகராக இருந்திருக்கிறார். இப்போதும் இருந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் மேலே வந்தார். துவக்கத்தில் சில அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ரஜினி பிறப்பால் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை.

பெங்களூர், மைசூர் பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பிளாட்பர்மில் கூட தூங்கியிருக்கிறார். நடிப்பின் மீது ஆசைப்பட்டு சென்னை வந்த போது ஒரு சிறையை வாடகைக்கு எடுத்து அதில்தான் வசித்து வந்தார். எல்லா ஏற்ற, இறக்கங்களையும் பார்த்து, அனுபவப்பட்டு வளர்ந்தவர்தான் ரஜினி.

அதனால்தான் எந்த விழாவில் பேசும்போதும் அவரிடம் தத்துவம் தூக்கலாகவே இருக்கும். அனுபவம் இல்லாமல் அப்படி பேச முடியாது. பல வெற்றி தோல்விகளை கடந்து வந்திருக்கிறார். இந்திய சினிமாவே அவரை சூப்பர்ஸ்டார் என அழைத்தாலும் அவரோ எளிமையாகவே இருக்கிறார்.

எளிமையான தோற்றம், உடை, உணவு என ஒரு யோகியின் மனநிலையில்தான அவர் இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் முயல் சாப்பிடும் கேரட் போன்ற உணவைத்தான் அவர் சாப்பிடுகிறார் என மறைந்த நடிகர் விவேக்கே ஒரு விழாவிலேயே பேசினார். படப்பிடிப்பு தளங்களில் கேரவானில் இருக்காமல் ஒரு மரத்தின் அடியில்தான் எப்போதும் அமர்ந்திருப்பாராம்.

படப்பிடிப்பு குழு வர தாமதமானால் மரத்தின் அடியின் கீழே தூங்கிவிடும் பழக்கம் ரஜினிக்கு இன்னமும் இருக்கிறது. இதை அவருடன் வேலை செய்த நபர்களுக்கு நன்றாகவே தெரியும். தன்னை ஒரு உச்ச நடிகர் என்றோ, சூப்பர்ஸ்டார் என்றோ எப்போதும், எங்கேயும் அவர் காட்டிக்கொண்டது இல்லை. அப்படி அவர் பேசியதும் இல்லை.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். எந்திரன் படத்தின் சில காட்சிகளை ரயில்வே டிராக்கில் எடுத்தோம். ரயில்வேயில் மிகவும் குறைவான நேரத்திற்கே ஷூட்டிங் அனுமதி கொடுப்பார்கள். எனவே, லன்ச் பிரேக் விடாமல் காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தேன். 3 மணிக்கு பிரேக் விட்டுவிட்டு நாங்கள் எல்லோரும் சாப்பிட சென்றுவிட்டோம்.

வந்து பார்த்தால் ரஜினி சார் ரயில்வே டிராக் அருகிலேயே இருந்தார். ரயில்வே டிராக் எப்படி கலீஜாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த இடத்திலேயே அவர் சாப்பிட்டுவிட்டார். அங்கிருந்து கேரவானுக்கு போக 20 நிமிடம் ஆகும். நம்மால் தாமதமானால் ஷுட்டிங் தாமதமாகும் என நினைத்தே அவர் அங்கேயே சாப்பிட்டிருக்கிறார்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

33 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago