சித்ராவுக்கு சின்னக்குயில் பட்டம் எப்படி வந்தது? கங்கை அமரன் சொன்ன தகவல்

Published on: March 18, 2025
---Advertisement---

பிஹைண்டுவுட்ஸ் நிறுவனம் கோல்டன் மைக் மியூசிக் விருதை இசை அமைப்பாளர் கங்கை அமரனுக்கு வழங்கியது. நிகழ்ச்சியில் மனோ, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கங்கை அமரன் சின்னக்குயில் சித்ரா பற்றி சில வார்த்தைகளைப் பேசினார். வாங்க பார்க்கலாம்.

இளையராஜா: இந்த விருது வாங்குறது உங்களுக்கு எப்படி இருக்குன்னு ஆங்கர் கேட்டதற்கு கங்கை அமரன் இவ்வாறு பேசினார். எங்களுக்கு லைக் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என்று இத்தனை பேரும் வருவதற்கு காரணம் இளையராஜா என்ற ஒரு பேரு தான்.

திரையுலகிற்கு ராஜா: இளையராஜா என்ற பெயரை பட்டம் சூட்டி இசை உலகிற்கு, திரையுலகிற்கு ராஜாவாக்கியது பஞ்சு அருணாச்சலம் அண்ணன். அவரது பிள்ளை சுப்புவிற்கு பஞ்சு அண்ணனே கொடுக்குற மாதிரி மனசுல சந்தோஷம். மனோ, சித்ரா இருவரும்தான் என் படத்துல அதிகமாக பாடி இருக்காங்க.

சின்னக்குயில் சித்ரா: சித்ரா ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடல்தான் முதல்ல பாடுனது. ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ என்று சித்ரா பாடியதும்தான் அவருக்கு ‘சின்னக்குயில் சித்ரா’ என்ற பட்டம் கிடைத்தது.

இந்தப் பாட்டை அவ்ளோ நுணுக்கமா சொல்லிக் கொடுத்து பாட வச்சோம். என்ற கங்கை அமரனிடம் ஆங்கர் உங்களுக்குப் பிடிச்ச நடிகை யாருன்னு கேட்டாங்க. அதுக்கு வைஜெயந்திமாலான்னு சொன்னார் கங்கை அமரன்.

பூவே பூச்சூடவா: 1986ல் வெளியான படம் நீதானா அந்தக் குயில். ஆர்.செல்வராஜ் இயக்க, இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா, ராஜீவ், லட்சுமி, ரஞ்சனி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில்தான் வைரமுத்து எழுதிய ‘பூஜைக்கேத்த பூவிது’ பாடலை சித்ரா பாடினார். அவருடன் பாடியது கங்கை அமரன். 1985ல் பாசில் இயக்கத்தில் வெளியான படம் பூவே பூச்சூடவா.

இளையராஜா இசை அமைத்துள்ளார். ஜெய்சங்கர், பத்மினி, நதியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில்தான் ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment