Categories: latest news

சரத்குமாரை நடிக்க வச்சது நான் செஞ்ச தப்பு!.. ஃபீல் பண்ணி பேசும் கவுதம் மேனன்!….

Gautham Menon: மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேமன். மின்னலே வெற்றி என்பதால் இரண்டாவது படமாக காக்க காக்க படத்தை இயக்கினார். முதல் படத்தை தயாரிப்பாளருக்கு எடுத்துக் கொடுத்த கவுதம் மேனன் காக்க காக்க படத்தை தனது ஸ்டைலில் இயக்கினார். ஏனெனில், அந்த படத்தில் அவரும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார்.

நந்தா படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்தார். காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியே படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதோடு, போலீசாரின் வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்கள் பற்றி இப்படம் பேசியது. இந்த படத்தின் மூலம் ஸ்டைலீஸ் இயக்குனராக மாறினார் கவுதம் மேனன்.

கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை கொடுத்தார். இந்த படத்தின் பாடல்களும், படமும் ஹிட் அடித்தது. அதன்பின் தொடர்ந்து பல படங்களையும் கவுதம் மேனன் இயக்கினார். ஆனால், பெரிய ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. சிம்புவை வைத்து இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படம் மட்டுமே ஹிட் அடித்தது.

அதன்பின் அவர் இயக்கிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. சிம்புவை வைத்து அவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற பாடங்களும் வெற்றியை பெறவில்லை. அதோடு, சொந்த படம் எடுத்து பல கோடிகள் நஷ்டமடைந்தார் கவுதம் மேனன். அதனால்தான் விக்ரமை வைத்து அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் இதுவரை வெளியாகவில்லை.

கடனை அடைப்பதற்காக சினிமாவில் நடிக்க துவங்கினார். இதுவரை பல படங்களிலும் நடித்துவிட்டார். சரத்குமார் – ஜோதிகாவை வைத்து இவர் இயக்கிய படம் பச்சைக்கிளி முத்துச்சரம். 2007ம் வருடம் வெளிவந்த இந்த படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசியிருக்கிறார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சேரனை நடிக்க வைப்பதே என் விருப்பமாக இருந்தது. அவர்கிட்ட கதை சொன்னபோது ‘3 மாதங்கள் காத்திருக்க முடியுமா?’ எனக்கேட்டார். இந்த படத்தை முடித்துவிட்டு ஜோதிகா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். எனவே, சரத்குமாரை வைத்து அந்த படத்தை இயக்கினேன். அது என் தப்பான சாய்ஸ். நான் அதிக டைம் எடுக்கிறேன்.. அதிக செலவு பண்றேன் என சொல்கிறார்கள். அந்த படத்தை மிகவும் குறைவான நாட்களில் எடுத்தேன். அந்த படம் ஓடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago