Categories: latest news

சத்தியம் செய்த இரட்டை இசை அமைப்பாளர்கள்… பிரிந்தது எப்படி? அட எம்எஸ்வி. கதையா இது?

நாம ரெண்டு பேரும் எந்தக் காலகட்டத்திலும் பிரியவே கூடாது. ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று கோவை மாரியம்மன் கோவிலில் சத்தியம் செய்தார்கள். அதற்குப் பிறகுதான் திரைப்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார்கள் அந்த இரட்டையர்கள். அந்த இசை அமைப்பாளர்கள் தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும்.

கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் 1964ல் நாகேஷ், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தின்போது தான் இவர்களது நட்பில் முதல் விரிசல் விழுந்தது. அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் காட்சி அந்தப் படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல் காட்சியில் எப்படி புதுமையைப் புகுத்தலாம் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். அதனால் இந்தப் பாடல் எப்படிப் பதிவாகிறது? அதற்குப் பின்னால் எப்படிப் படமாக்கப்படுகிறது என்றெல்லாம் அந்தப் படத்தில் காட்டினார்கள்.

அந்தப் பாடல் படமாக்கும்போது எம்எஸ்.வி. கோட், சூட் போட்டுக்கிட்டு அந்தப் பாடலைகக் கன்டக்ட் செய்வது போல காட்டினார்கள். இதைப் பார்த்ததும் டி.கே.ராமமூர்த்திக்கு திடுக்கென்று இருந்தது. நாமும் தானே அந்தப் பாடலுக்கு இசை அமைத்திருக்கிறோம்.

நாம இல்லாம இவர் மட்டும் கன்டக்ட் செய்வதாகக் காட்டினால் இவர் தனியா இசை அமைத்ததாக அல்லவா ரசிகர்கள் நினைப்பாங்க? என்று டி.கே.ராமமூர்த்தி மனம் வருந்தினார். ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்து கொண்டு இருக்கும் இருவரில் ஒருவருக்கு மட்டும் வருத்தம் இருந்தா சினிமாவில் சும்மா விடுவார்களா?

தினமும் அதைப் பத்திப் பேசிப் பேசி சிறு புண்ணாக இருந்ததை ரணமாக ஆக்கி விட்டார்கள் திரையுலக நண்பர்கள் சிலர். அதன் காரணமாகத்தான் எம்எஸ்வி.கிட்ட இனிமே நான் தனியா இசை அமைக்கிறேன் என டிகே.ராமமூர்த்தி சொன்னார். அன்னைக்கு இருந்த சூழ்நிலையில நாம என்ன சொன்னாலும் ராமமூர்த்தி கேட்க மாட்டார் என்பது எம்எஸ்வி.க்கு தெரிந்தது.

அது மட்டும் இல்லாம இந்தப் பிரிவு நீண்ட நாள் நீடிக்காது. ஒரு காலகட்டத்தில் நிச்சயமாகத் திரும்பி வருவார்னு நினைத்தார். அதனால்தானோ என்னவோ சரி. நீங்க தனியா இசை அமைச்சிக்கோங்கன்னு சொல்லி விட்டார். சிவாஜியின் பணம் படத்தில் தான் டி.கே.ராமமூர்த்;தி முதன் முதலாகத் தனியாக இசை அமைத்தார். தொடர்ந்து எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் வரை டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்து தன் இசைப்பயணத்தை முடித்துக் கொண்டார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago