Categories: latest news

சிவாஜியுடன் பணியாற்றிய வசனகர்த்தா தயாரிப்பாளர் ஆனது எப்படி? பிரபலம் சொன்ன தகவல்

சினிமாவில் அறிமுகமான கட்டத்திலேயே எம்ஜிஆர் மற்றும் சிவாஜியோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர் வி.சி.குகநாதன். 1970ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான எங்க மாமா படத்தில் சிவாஜியோடு இணைந்து பணியாற்றினார். அந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் வி.சி.குகநாதன்தான். என்றாலும் அவருக்கு சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் வரவில்லை.

உயர்ந்த மனிதன் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு குகநாதனுக்கு வந்தது. உயர்ந்த மனிதன் படத்தை ஏவிஎம். நிறுவனம் தயாரித்தது. அந்த நிறுவனத்தைப் பொருத்தவரை ஆஸ்தான எழுத்தாளர்னா ஜாவர் சீத்தாராமன்தான். அந்த நேரத்தில் மின்னல், மழை, மோகினி என்ற படத்தை ஜாவர் சீத்தாராமன் இயக்கிக் கொண்டு இருந்தார்.

அந்தப் படத்துக்கு அவர் போக வேண்டி இருந்ததால உயர்ந்த மனிதன் படத்துக்கு ஒரு சில காட்சிகள்ல அவருக்கு வசனம் எழுத முடியல. அப்படிப்பட்ட சூழலில்தான் குகநாதனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது ஏவிஎம். நிறுவனம். குகநாதனைப் பொருத்தவரை அந்த நிறுவனத்துடன் மிக நெருக்கமான நட்பில் இருந்தார். அதனால்தான் அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அந்தப் படத்தில் தான் எழுதிய வசனத்தை சிவாஜியிடம் படித்துக் காட்டினார். அதில் இருந்த நேர்த்தியைப் பார்த்த சிவாஜி தனது அடுத்த படமான தங்கைக்காக படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பைக் குகநாதனுக்குப் பெற்றுத் தந்தார். அதன்பிறகு சிவாஜியை வைத்துப் படம் தயாரிக்குற வாய்ப்பே அவருக்குக் கிடைத்தது என்பது வேறு விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

முதல் குரல் என்ற படத்தை வி.சி.குகநாதன் தான் தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தில் சிவாஜி உடன் இணைந்து அர்ஜூன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் வெளியான இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

3 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

5 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago