Categories: latest news

கையில் 400 ரூபாய்.. சென்னைக்கு பஸ் ஏறிய அந்த நாள்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!..

Ilayaraja: சினிமாவில் எந்த துறையில் நுழைய வேண்டும் என்றாலும் சென்னைக்குதான் வரவேண்டும். ஏனெனில், இயக்குனர்கள், பெரும்பாலான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், சினிமாவில் வாய்ப்பை வாங்கி கொடுப்பவர்கள், சினிமா ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என எல்லாமே அங்குதான் இருக்கிறது. எனவேதான், சினிமாவில் நுழைய விரும்புபவர்கள் எல்லோருமே சென்னையை நோக்கி போகிறார்கள்.

பெரும்பாலும் மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சினிமாவில் அதிகம் இருப்பார்கள். இப்போது அது கொஞ்சம் மாறியிருக்கிறது. 70,80களில் சினிமாவில் கோலோச்சியவர்கள் பலரும் இந்த 2 மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா ஆகியோர் கூட மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான்.

இசைஞானி இளையராஜா இசையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற கனவில் பண்ணைபுரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தது பற்றி இப்படி சொல்கிறார்:

ஊரில் அண்ணன் பாஸ்கரோடு இணைந்து கம்யூனிஸ்ட் மேடைகளில் இசைக்கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தேன். பல இடங்களில் எங்கள் கச்சேரி நடக்கும். சினிமா இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. சென்னை சென்றால்தான் நிறைய விஷயங்களை கற்றுகொள்ள முடியும் என்கிற நிலை. எங்களுக்கு முன் பாரதிராஜா சென்னைக்கு போய்விட்டார். நடிக்க ஆசைப்பட்டு அங்கு போய் அது முடியாமல் நாடகங்களை போட்டு கொண்டிருந்தார்.

அதேபோல், என் நண்பனான கதாசிரியர் செல்வராஜும் அடிக்கடி சென்னை போய் விட்டு ஊருக்கு திரும்பி வருவான். கையில் கொஞ்சம் காசு சேர்த்து சென்னை போவான். அந்த காசு தீர்ந்து போனதும் திரும்பி வந்துவிடுவான். நாங்கள் சென்னைக்கு செல்வது என முடிவு செய்ததும் என் அம்மா 400 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பினார்.

‘உங்கள் செலவுக்கு 50 ரூபாய் வைத்து கொள்ளுங்கள்’ என்று கூட நாங்கள் சொல்லவில்லை. அந்த அளவுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்தோம். தேனியிலிருந்து மதுரைக்கு பஸ் ஏறினோம். எங்களை வழி அனுப்ப வந்த செல்வராஜ் ‘போங்கடா போங்க.. அங்கு போனா உங்களுக்கு தெரியும். நான் பின்னாலயே வரேன்’ என சொன்னன். பேருந்து சென்று கொண்டிருந்தபோது ‘இந்த பணம் போதாது.. மதுரையில் சில நாட்கள் தங்கி இசைக்கச்சேரிகளை செய்து கொஞ்சம் காசு சம்பாதித்து அதன்பின் சென்னை போகலாம் என நான் சொன்னேன். பாஸ்கரும் சம்மதித்தான்.

மதுரையில் இறங்கி எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் சென்று பேசினோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாம் வாழ்வில் முன்னேற யாரும் உதவி செய்ய மாட்டார்கள். நாம்தான் நமக்கு உதவி செய்து கொள்ளவேண்டும் என்கிற பெரிய பாடம் எனக்கு அன்று புரிந்தது. அன்று இரவே சென்னைக்கு பஸ் ஏறிவிட்டோம்’ என சொல்லியிருக்கிறார்.

அந்த செல்வராஜ் எழுதிய அன்னக்கிளி கதையில்தான் இளையராஜா முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானதுதான் காலத்தின் சுவாரஸ்யம்!..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago