Categories: latest news

எட்டு வயதில் வந்த காதல்!.. அதற்கு 20 வயதில் இளையராஜா போட்ட செம டியூன்!.. செம பிளாஷ்பேக்!..

Ilayaraja: இசை என்பது புதிதாக உருவாக்கப்படுவதில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நான் உருவாக்குகிறேன். அப்படி நான் உருவாக்கிய பின் அந்த பாடல் எனக்கு சொந்தமில்லை. அதை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுடையது என சொன்னார் இளையராஜா. ஆழமாக யோசித்தால் அவர் சொன்னதில் உள்ள உண்மை புரியும்.

அதேபோல், பல பாடல்கள் வேறு ஒருவரின் இசையில் உருவான பாடலின் பாதிப்பிலிருந்து உருவாகியிருக்கிறது. இளையராஜவே பல ஹிந்தி பாடல்களின் பாதிப்பிலிருந்து பல தமிழ் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால், அவையெல்லாம் காப்பி அல்ல. அந்த பாடல் கொடுத்த அதே உணர்வை தனது பாடல்களில் கொண்டு வந்தார். அதில் பல பாடல்கள் இயக்குனர்களாலும், நடிகர்களாலும் கேட்டு பெற்றவை.

மேலும், இளையராஜா ஏற்கனவே போட்ட ஒரு பாடலை சொல்லி அது போலவே ஒரு பாடல் வேண்டும் என சில இயக்குனர்கள் கேட்பார்கள். அப்படியும் பல பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார். இதுபற்றி இளையராஜவே பல இசை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்: கமல் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் வரும் சூழ்நிலையை சொல்லி எனக்கு எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் வரும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போல வேண்டும் என கமல் கேட்டார். அப்படி இளையராஜா போட்ட பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல். இது போல பல நூறு உதாரணங்களை சொல்ல முடியும்.

லைலா மஜ்னு: இந்நிலையில், ஒரு இசை நிகழ்ச்சியில் ‘உங்களுக்கு எந்த வயதில் இசை மீது காதல் வந்தது?’ என பின்னணிப் பாடகர் மனோ கேட்டார். அதற்கு பதில் சொன்ன இளையராஜா ‘நான் மூன்றாம் வகுப்பு படித்துகொண்டிருந்தபோது என் அண்ணன் ஒரு தியேட்டரில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தியேட்டருக்கு படம் பார்க்க போவேன். அப்படி நான் பார்த்த படம்தான் லைலா மஜ்னு.

இந்த படத்திற்கு சி.ஆர்.சுப்புராமன் இசையமைத்திருந்தார். அந்த படத்திற்கு அவர் இசையமைத்திருந்த பாடல்கள்தான் எனக்கு இசையின் மீது காதலை ஏற்படுத்தியது. அந்த இசை என் நாடி, நரம்பு எல்லாம் பரவியிருந்தது. பின்னாளில் எனக்கு 20 வயதான போது ‘நாம் இசையமைப்பாளர் ஆனால் லைலா மஜ்னு காதலுக்கு என்ன பாடல் கம்போஸ் செய்வோம் என யோசித்து அப்போதே நான் போட்ட டியூன்தான் ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே’ என சொல்லி இருக்கிறார். பின்னாளில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த அகல் விளக்கு படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

5 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

1 hour ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago