Categories: latest news

அவர் படத்துக்கு மியூசிக் பண்றது மனசுக்கு இதமா இருக்கும்!. ஃபீல் பண்ணி பேசும் இளையராஜா!…

Ilayaraja: இளையராஜா பல இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருக்கிறார். சுமார் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர்களில் அதிகம் பாடல்களை பாடி சாதனை செய்தவரும் இவர்தான். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

சிம்பொனி இசை: சினிமா மட்டுமில்லாமல் ஆல்பங்களை உருவாக்குவது, சிம்பொனி இசை அமைப்பது என பல எல்லைகளை தொட்டிருக்கிறார். சமீபத்தில் கூட சிம்பொனி இசையை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். ஒருபக்கம், இசை கச்சேரிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். சமீபத்தில் திருநெல்வேலியில் அவரின் இசைக்கச்சேரி நடந்தது.

அதோடு, ஊடகங்களில் தொடர்ந்து பேசியும் வருகிறார். அதில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு முதல் சினிமாவில் அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் பேசி வருகிறார். நான் ஆன்மிகத்திற்குள் போய்விட்டதால் விமர்சனங்களை என்னை பாதிப்பதில்லை என சொல்லியிருக்கிறார்.

விமர்சனங்களுக்கு பதில்: அதோடு, தனது இசையை கேட்டு மதம் பிடித்த யானை ஒன்று அமைதியாக நின்றதாக கூறியிருந்தார். தனது இசையை எல்லோரும் கேட்டுதான் ஆக வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது என்றும் ஜாலியாக பேசியிருந்தார். மேலும், ‘என்னை திமிறு பிடித்தவன் என சொல்கிறார்கள். யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். எனக்குதான் திமிறு இருக்கணும். ஆனல், உண்மையில் எனக்கு திமிறு இல்லை. என்னை அப்படி சொல்பவனுக்குதான் திமிறு இருக்கிறது’ என பேசினார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பாலுமகேந்திரா. சில இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது மனதுக்கு இதமாக இருக்கும். அப்படி ஒரு உணர்வை அவரின் படங்கள் ஏற்படுத்தும். இதனால் மிகவும் ரசித்து ரசனையோடு இசையமைப்பேன். அவரின் ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் இடையில் நான் 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்.

அந்த படங்களுக்கு இசையமைப்பதை விட பாலுமகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்து மனதில் ஒட்டிக்கொள்ளும். அவர் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்’ என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

47 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago