Categories: latest news

கல்யாணத்துக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்!. டெரர் பீஸா இருப்பார் போலயே!….

Ilayaraja: இளையராஜா எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற நேரத்தில் கொஞ்சம் ஜாலியாக பேசினாலும் வேலை என வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அவரது மனம், உடல் என எல்லாமே இயங்குவது இசையில்தான். எப்போதும் அவரின் மூளை இசையை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் இப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடிந்தது.

இளையராஜா பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு அவரை பற்றி தெரியும். கமல் கூட ஒருமுறை ‘இளையராஜா கரடு முரடானவர் என சிலர் சொல்வார்கள். சிலரோ அவர் பலாப்பழம் போல. மேலே முள். உள்ளே இனிப்பு என்பார்கள். என்னைக்கேட்டால் மேலே, உள்ளே என அவர் முழுக்க இனிப்புதான். உன் நாக்கில் முள்ளிருந்தால் என்ன செய்ய முடியும்’ என்பதுதான் என் கருத்து’ என பேசியிருந்தார்.

இளையராஜா காசு விஷயத்தில் கறார் பேர் வழி என பலரும் சொல்வர்கள். சம்பள விஷயத்தில் கோபப்பட்டுதான் பாட்ஷா படத்தில் ரஜினியுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால்தான் அப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அந்த படத்திற்கு பின் அவர் ரஜினிக்கு இளையராஜா இசையமைக்கவே இல்லை. அதேநேரம், சம்பளமே வாங்காமல் அவர் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கூட அவர் பதில் சொல்வது இல்லை. நான் முழுக்க ஆன்மிகம் மற்றும் இசை என மூழ்கிவிட்டேன். என்னைப்பற்றி வரும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை. நான் சாதித்து காட்டியிருக்கிறேன். அதனால், எனக்குதான் தலைக்கணம் இருக்கத்தான் செய்யும். எதையுமே சாதிக்காத நீ என்னை பற்றி பேசுகிறாய் என பதில் சொன்னவர் இளையராஜா.

இந்நிலையில், உங்கள் மனைவி பற்றி சொல்லுங்கள் என ஊடகம் ஒன்றில் கேட்டதற்கு ‘ என் மனைவி என் உறவுக்காரர். என் அக்கா மகள். எங்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். சென்னையிலிருந்து என்னை கிளம்பி வர சொன்னார்கள்.

சென்னையில் என்னை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு போ, பார்க்குக்கு கூட்டிட்டு போ.. தியேட்டருக்கு கூட்டிட்டு போய் என்றெல்லாம் ஜீவா என்னை கேட்டால் அடுத்த பஸ்ஸிலேயே கூட்டி வந்து இங்கு விட்டுவிடுவேன் என கண்டிஷன் போட்டேன். நான் இப்படி சொல்கிறேன் என பயமுறுத்தித்தான் ஜீவாவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஒரு மனைவியாக தனது கடமையை அவர் சரியாக செய்துவிட்டார்’ என பேசியிருந்தார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

11 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago