Categories: latest news

சாப்பாட்டுக்கு காசில்லாம நடந்து போனேன்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!…

Ilayaraja: இளையராஜா இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனால், அப்படியே 60 வருடங்களுக்கு பின்னால் போனால் அவர் சாப்பாட்டுகே கஷ்டப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சொந்த ஊரை விட்டு சென்னை வந்தவர்தான் இளையராஜா.

அவர்களுக்கு முன்பே நடிகராகும் ஆசையில் சென்னை வந்தவர் பாரதிராஜா. அவர் வடபழனியில் பகுதியில் உள்ள ராம் தியேட்டருக்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்தார். சென்னை போனால் பாரதிராஜா தங்கியுள்ள அறையில் நாமும் தங்கிகொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இளையராஜா, அவரின் சகோதரர் அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும் சென்னை வந்தார்கள்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சில நாடக நடிகர்களை வைத்து நாடகம் போட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. சென்னை வந்த பின் இளையராஜா பிரதர்ஸ் செலவுக்காக நாடகங்களுக்கு இசையமைக்க துவங்கினார்கள். பாரதிராஜா போட்ட நாடகங்களுக்கு மட்டுமல்ல. பலரின் நாடகங்களுக்கும் இசையமைத்தார்கள். இயக்குனர் ஷங்கர் காமெடி நடிகராக நடித்த நாடகங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

எல்லா நேரமும் அதற்கு சம்பளம் கிடைக்கும் என சொல்ல முடியாது. சில சமயம் வெறும் கையோடும் திரும்ப வேண்டியிருக்கும். இதுபற்றி இளையராஜாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியபோது ‘ஒருமுறை தி.நகரில் இருந்த ராமராவ் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு நாடகத்திற்கு இசையமைக்க போனோம். நாடகம் முடிந்துவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். யாரும் பணம் கொடுக்கவில்லை.

அங்கிருந்து டாக்ஸில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு செல்லக்கூட பணம் இல்லை. கையில் 50 பைசா இருந்தது. எனவே, கீபோர்டு, தபேலா போன்ற இசைக்கருவிகளை ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் மூவரும் நடந்தே போனோம்.

இரவு 10.45 மணி இருக்கும். டிரஸ்ட்புரம் ரவுண்டானா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து நந்தகுமார் என்கிற நண்பர் ஒருவர் எங்களை பார்த்துவிட்டு கீழே இறங்கிவிட்டார். நடந்ததை கேட்டுவிட்டு ‘நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?’ எனக்கேட்டார். இல்லை என சொன்னதும் அருகில் இருந்த ஹாலிவுட் ஹோட்டலுக்கு அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்தார். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அறையில் பசியோடு இருந்த பாரதிராஜாவுக்கும் டிபன் வாங்கிக்கொண்டு போனோம். ஒருவேளை சாப்பாடு போட்டவரை கூட நான் மறந்தது இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago